வல்வெட்டித்துறை மதவடியில் அமைந்துள்ள விக்னேஸ்வர பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெறவுள்ளது.
விக்னேஸ்வர பாலர் பாடசாலை தலைவர் திரு.சி. தவராசா அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு.அ.ஸ்ரீகரன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், கல்வி முகாமைத்துவம், வடமராட்சி கல்வி வலயம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.வி. அருள்பஸ்ரியன் (கிராம சேவையாளர் J/389 வல்வை வடமத்தி) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
இவ்விளையாட்டுப் போட்டிக்கு அனைவரையும் வருகை தருமாறு அழைகின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.