வல்வை நகரசபைத்தலைவரால் ஏனைய உறுப்பினர்களிற்கு எதிராக மானநஷ்ட வழக்கு, எதிர்மனுதாரர்கள் பதிலும் அளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/07/2014 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவர் திரு.நடராசா அனந்தராஜ் அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இதர வல்வை நகரசபையின் உறுப்பினர்கள் உப தலைவர் கந்தசாமி சதீஸ், திரு.எஸ்.எக்ஸ்.குலநாயகம், கோணலிங்கம் கருணானந்தராஜா, கனகராஜா ஜெயராஜா மற்றும் சக்திவேல் பிரதீபன் ஆகியோர்களிற்கு எதிராக மானநஷ்ட வழக்கு ஒன்றிற்கான கோரிக்கைக் கடிதம் ஒன்றை தனது சட்டத்தரணி மூலம் அனுப்பியுள்ளார்.
தனது கௌரவத்திற்கும், நேர்மைத் தன்மைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக ஊழல், இலஞ்சம், நிர்வாகச் சீர்கேடு என ஊடகங்களுக்குத் தெரிவித்ததாகத் தெரிவித்து, இதனால் தனக்கு ஏற்பட்டுவரும் மானநஸ்டம் தொடர்பாக ஒவ்வொருவரிடம் இருந்தும் ஆகக்குறைந்த தொகையாக தலா ஐம்பது இலட்சம் ரூபாவை வழங்கவேண்டும் என்று தனது சட்டத்தரணி திரு.வி.எஸ் நிரஞ்சனன் மூலம் 27.06.2014 அன்று கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பியுள்ளார்.
எதிர்மனுதாரர்கள் பதில்
நகரசபைத் தலைவரின் சட்டத்தரணியின் கோரிக்கைக் கடிதத்திக்கு எதிர்மனுதாரர்களான கந்தசாமி சதீஸ், திரு.எஸ்.எக்ஸ் .குலநாயகம், கோணலிங்கம் கருணானந்தராஜா, கனகராஜா ஜெயராஜா, சக்திவேல் பிரதீபன் ஆகியோர் தமது சட்டத்தரணி திரு.நா.சத்தியநாதன் ஊடாக பதில் கடிதங்களை கடந்த 7 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளனர்.
அக்கடிதங்களில் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சகல குற்றச்சாட்டுக்களையும் தமது கட்சிக்காரர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாகவும், தினசரிப் பத்திரிகைகளிலோ அல்லது வேறெந்தப் பத்திரிகைகளிலோ அவ்வாறான தகவல்கள் தமது கட்சிக்காரர்களினால் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கடிதங்களில், உண்மைக்கு புறம்பான நோக்கங்ககளுடன் தங்கள் கட்சிக்காரரால் தங்களுக்குத் தரப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் உண்மைக்குப் புறம்பான வழக்கொன்றைத் தாக்கல் செய்யும் பட்சத்தில், அத்தகைய வழக்கால் தனது கட்சிக்காரருக்கு ஏற்படக்கூடிய அபகீர்த்திக்கு எதிராக அவமதிப்பு வழக்கொன்றைத் தங்கள் கட்சிக்காரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்படும் என எதிர்மனுதாரர்களின் சட்டத்தரணியின் கடிதங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.