உடுப்பிட்டி சந்தியில் பழைய இராணுவ காவலரன் இருந்த வீட்டின் மலசலகுழியை துப்பரவு செய்த போது வெடி பொருட்களை வல்வெட்டித்துறை பொலிஸாா் மற்றும் விசேடஅதிரடி படையினர் சோ்ந்து மீட்ட்டுள்ளனர்.
குறித்த மலசலக்கூடத்தை துப்புரவு செய்யும் போது அதற்குள் இருந்து பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தவகையில், 4 கிளைமோர் குண்டுகள், 17 கைக்குண்டுகள், 3 ஆயிரத்து 500 துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டன.
இந்தப் பகுதியில் முன்னர் இராணுவ முகாம் இருந்ததாகவும் பின்னர், மீள்குடியேறிய காணி உரிமையாளர் மலசலகூடத்தை துப்புரவு செய்யும் போது ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட ஆயுதங்கள், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு இணையதளங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.