மன்னாரில் நடைபெற்று வரும் காற்றாலை கட்டுமான பணிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2020 (சனிக்கிழமை)
இலங்கையில் மிகப்பெரிய காற்றாலை மின் நிலையத்தை wind power plant அமைக்கும் பணிகள் மன்னாரில் இடம்பெற்று வருகிறது. இதனை அமைக்கும் ஒப்பந்தத்தை டென்மார்க்கின் Vestas Wind நிறுவனம் பெற்றுள்ளது.
350 ஏக்கர் நிலப்பரப்பில் 104 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது,
இலங்கை மின்சார சபையின் ரெண்டர் மூலம் அவர்கள் இந்த வாய்ப்பை பெற்றுள்ளனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் தற்போது, அடித்தளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக காற்றாலை மின்உற்பத்தி ஜெனரேட்டர் 2020 மே மாதத்திற்குள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.