வல்வை ஆனந்த யோகாலயாவின் 2 வது ஆண்டு விழாவும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நேற்று பிற்பகல் 04.00 மணிக்கு நெடியகாடு கணபதி மஹாலில் நடைபெற்றது.
DR.S இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சுப்பிரமணியம் சிவகுமார் (Bsc Eng,Msc,Ph.D) (சிவில் பொறியியல் பீடம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யோகரத்தினா செல்வி ஷாலினி- B.E MSc, M.PHIL (ஆனந்த யோகாலயா , சென்னை தமிழ்நாடு இந்தியா) அவர்களும், யோக மகாரத்தினா திருமதி திலகா கைலாசம் M.A Dyn (ஆனந்த யோகாலயா , சென்னை தமிழ்நாடு இந்தியா) அவர்களும், யோக ரத்தினா திருகோபு காளிமுத்து (துணைத்தலைவர் (உலக தெய்வநெறி மன்றம் அண்ணாநகர் சென்னை) கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
விருந்தினர்களை வரவேற்பினைத் தொடர்ந்து கடவுள் வணக்கம், யோகா செயல் வடிவங்கள், விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றிருந்தன. மேலும் யோகா கலை பயின்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுகளின் படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.