வல்வெட்டித்துறை விக்னேஸ்வர பாலர் பாடசாலையில் பாலர் தின விழாவும், பட்டத் திருவிழாவின் அறிமுக விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 09.00 மணிக்கு சிவகுரு வித்தியாசாலை தையல் பாகர் அரங்கத்தில் நடைபெற்றது.
விக்னேஸ்வர பாலர் பாடசாலையின் தலைவர் திரு.வி.கவிசெல்வன் அவா்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்விற்கு திரு.சந்திரசேகரம் பிரசாந் (செயலாளர், நகராட்சி மன்றம், வல்வெட்டித்துறை) அவர்கள் பிரதம விருந்தினராகவும், திரு.செல்லக்கண்டு நவரத்தினம்(யப்பந்துரை) அவர்களும், குமாரசாமி பாலசிங்கம்(சிவலிங்கம்) அவர்களும், மோகனந்தசாமி செல்வச்சிவம் அவர்களும் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
முதல் கட்டமாக மதவடியில் அமைக்கப்பட்டுள்ள பாய்மரக் கப்பலும், பொங்கல் பானையும் விருந்தினர்களால் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாலர்களின் அணிவகுப்புடன் வல்வை சிவகுரு வித்தியாசாலை தையல் பாகர் அரங்கிற்கு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.
மேலும் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கத்துடன் பாலர் தின விழா ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியில் பாலர்களின் பேச்சு, நடனம், போன்ற நிகழ்வுகளுடன் விருந்தினர் உரையும் இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.