Dr. மயிலேறும் பெருமாளின் பூதவுடல் வல்வை சந்தியில் பார்வைக்கு (திருத்திய பதிப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/10/2018 (திங்கட்கிழமை)
நேற்று காலை இயற்கை எய்திய முன்னாள் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி திரு.மயிலேறும்பெருமாள் அவர்களின் பூதவுடல் இன்று 08.10.18 பிற்பகல் 4 மணியளவில் வல்வெட்டித்துறை சந்தியில் மக்கள் பார்வைக்கு அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் அன்னாரின் பருத்தித்துறையில் அமைந்துள்ள வீட்டில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று, பிற்பகல் 2 மணிக்கு பொலிகண்டிச் சந்திக்கு எடுத்துவரப்படும் அன்னாரின் பூதவுடல், அங்கிருந்து நவிண்டில், உடுப்பிட்டி வழியாக வல்வெட்டித்துறை சந்திக்கு எடுத்து வரப்படும்.
வல்வைச் சந்தியில் அமைக்கப்படும் விசேட பந்தலில் பொதுமக்கள் அஞ்சலியைத் தொடர்ந்து, இரங்கற்கூட்டம் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து சுமார் 4 மணியளவில் பிரதான வீதி வழியாக பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு, ஊறணி வைத்தியசாலையில் முன்பாக வைத்தியசாலை ஊழியர்கள் அஞ்சலி இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து வல்வை ஊறணி இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.