வல்வை ஆலடியில் இடம்பெறும் திலீபன் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/09/2018 (புதன்கிழமை)
இந்திய அரசிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 15.09.1987 அன்று நீர், ஆகாரம் எதுவுமின்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து இன்றைய தினமான 26.09.1987 அன்று உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு.திலீபன் (ராசையா பார்த்தீபன்) அவர்களின் இறுதி நாள் நினைவேந்தல் இன்று வல்வெட்டித்துறையில் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இறுதிநாள் நினைவேந்தலையொட்டி வல்வெட்டித்துறை ஆலடியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சதுக்கம் மற்றும் பிரதான வீதி மஞ்சள் சிகப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் திலீபனின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதியில் திலீபனின் படங்கள் தாங்கிய பெரியளவிலான பனர்களும் வைக்கப்பட்டுள்ளதுடன் திலீபனின் எழுச்சிப் பாடல்களும் ஒலிக்கப்பட்டன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.