வல்வை நகரசபை - கூட்டமைப்பு, சுஜேட்சைக் குழு தொடர்ந்து பேச்சு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2018 (வியாழக்கிழமை)
கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் வல்வெட்டித்துறை நகரசபையில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறத் தவறிய காரணத்தால், எதிர்வரும் 27 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற ஆணையாளரால் நகரசபைத் தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளது.
இதேவேளை இதற்கு முன்பாக ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முகமாக 7 ஆசனங்களைப் பெற்றுள்ள கூட்டமைப்பு மற்றும் 4 ஆசனங்களைப் பெற்றுள்ள சுஜேட்சைக் குழு ஆகிய இரண்டும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவருகின்றன.
ஆனாலும் இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.