Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

கம்பன் விழா இன்று ஆரம்பம்

பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2020 (வெள்ளிக்கிழமை)
மூன்று தசாப்தம் நிலவிய யுத்த காலத்திலும், அத்தனை இடர்பாடுகளின் மத்தியிலும் - இயங்கி வந்த ஒரு இலக்கியக் கழகம் அகில இலங்கை கம்பன் கழகம் ஆகும். இக்கழகம் 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த இளைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்டது. கம்பவாரிதி இ. ஜெயராஜ் அமைப்பாளராகவும், தி. திருநந்தகுமார் தலைவராகவும், க. குமாரதாசன் செயலராகவும், ​ெடாக்டர் கு. ஸ்ரீ. இரத்தினகுமார் பொருளாளராகவும் பணியாற்றினர்.
 
இக்கழகத்தின் பணி பரந்துபட்டது. இளம் தலைமுறையினருக்கு மரபிலக்கிய பயிற்சியும் ஆற்றலும் உருவாக்குதல், கிராமங்கள் தோறும் சென்று சொற்பொழிவுகள் மூலம் இலக்கியச் சுவை பரப்புதல், இலக்கியம் சார்ந்த நூல்களை பதிப்பித்தல், இளைஞர்கள் மத்தியில் கவிதை, பேச்சு, மனனப் போட்டிகள் நடத்தி ஆற்றல்களை வெளிக்கொணர்தல், ஆண்டு தோறும் கம்பன் விழா நடாத்தல், மரபுரீதியான இசை வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் இசைவிழா நடாத்துதல், நாடக, நாட்டியத் துறையின் வளர்ச்சிக்காக நாட்டிய வேள்வி நிகழ்ச்சிகளை நடாத்துதல், கம்பஇராமாயணத்தை மட்டுமல்லாது திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய பிற இலக்கிய கருத்தரங்குகளை நடத்துதல், சொல்விற்பனம், வித்தகம் முதலிய தொடர் நிகழ்ச்சிகளை நடத்துதல் முதலியன அப்பணிகளுள் சிலவாகும்.
 
அவ்வகையில் கொழும்புக் கம்பன் கழகம் என்பது இக்கழகத்தால் 1994இல் நிறுவப்பட்ட ஒரு கிளைக் கழகமாகும். இக்கழகம் இவ்வாண்டு வெள்ளிவிழா காண்கின்றது. 1994ஆம் ஆண்டில் இக் கழகம் நிறுவப்பட்ட பொழுது இன்றைய ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் பெருந்தலைவராகவும், மொறீசியஸ் நாட்டின் தூதுவர் தெ. ஈஸ்வரன் தலைவராகவும், பொ. பாலசுந்தரம் செயலாளராகவும், ச.ஆ. பாலேந்திரன் பொருளாளராகவும், நிர்வாகப் பொறுப்பேற்று கம்பன் இலக்கியப் பணியில் உழைத்தனர்.
 
ஆண்டு தோறும் தமிழ் அறிஞர்களை கௌரவித்து விருதும் பணமுடிப்பும் வழங்கிக் கௌரவித்து வரும் கம்பன் கழகம், முன்னுதாரணமாய் வாழ்ந்து காட்டிய சான்றோர் ஒருவரை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து ஒரு இலட்சம் ரூபா பணமுடிப்புடன் கூடிய 'மகரயாழ்' விருதினை யாழ் விழாக்களில் வழங்கி வந்தது. கொழும்பு விழாக்களில் உலகளாவிய ரீதியில் கலை, இலக்கியத்துறையில் சாதனை நிகழ்த்திய பெரியோர்க்கென ஆண்டுதோறும் 'கம்பன் புகழ்' விருதினை வழங்கி வருவதோடு, துறைசார்ந்த அறிஞர் அறுவர்க்கு சான்றோர் கௌரவங்களையும் வழங்கி வருகிறது. மேலும் ஆறுமுகநாவலர் விருது, விபுலாந்தர் விருது உள்ளிட்ட அறக்கட்டளை விருதுகள் ஐந்தையும், தக்க ஆற்றலாளர்களுக்கு கம்பன் கழகம் வழங்கி வருகிறது.
 
ஆதரவற்றோர்க்குத் துணைபுரியவும், ஆதரவற்ற மாணவரின் கல்வி வளர்ச்சிக்குத் துணை புரியவும் இவ்வமைப்பு தொடர்ந்து உதவி புரிந்து வருகிறது. மேலும் போரின் நிறைவுக் காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு நிதியுதவி வழங்கியும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்கியும் சமுதாயப் பணியாற்றி வரும் கம்பன் கழகம் ஆண்டுதோறும் ஆதரவற்ற சிறுவர் மற்றும் முதியோர்களைப் பாராமரிக்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்தும் வருகிறது.
 
தமிழ் அன்பர்களினதும், ஆதரவாளர்களினதும் அன்பளிப்புகளைக் கொண்டு மட்டுமே இயங்கி வரும் இக்கழகம், எந்தவொரு நிகழ்ச்சியையும் ரிக்கற் விற்பனைக்காக நடத்தவில்லை.
 
மரபுத்தமிழுக்கு உரிய இடம் வழங்கிய கம்பன் கழகம், தமிழின் நவீன போக்குகளையும் புதிய படைப்பிலக்கியப் புலங்களையும் வளப்படுத்தியே வந்துள்ளது. அவ்வகையில் ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் கம்பன் கழகத்தின் பங்கு கணிசமானது. ஆண்டுதோறும் விழாக்களில் அமைக்கப்படும் கவியரங்கங்களில் பங்குபற்றிய நவீன கவிஞர் பலரும், சமகால அரசியல் சமூக விடயங்களைத் துணிந்து பாடலாயினர். கவிஞர்கள் இ. முருகையன், புதுவை இரத்தினதுரை, கல்வயல் குமாரசாமி, வ.ஐ.ச. ஜெயபாலன், சோலைக்கிளி எனத் தொடரும் ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர்கள் பலரும் தங்கள் அரங்க ஆளுமையால் கம்பன் விழாக்களை மெருகேற்றியமை குறிப்பிடத்தக்கது. மேலும் டொமினிக்ஜீவா, செங்கை ஆழியான், தெணியான் போன்ற படைப்பிலக்கியக் கருத்தாக்கள் கம்பன் கழகத்தால் கௌரவித்துப் போற்றப்பட்டமையும் நினைவிற் கொள்ளத்தக்கது.
 
அந்த வகையில் அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டு கொழும்புக் கம்பன்விழா ஜனவரி 31ஆம் திகதியான இன்று ஆரம்பமாகின்றது. இன்று முதல் பெப்ரவரி 4ஆம் திகதிவரை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இவ்விழா நடைபெறவுள்ளது. இலங்கையில் கம்பன் கழகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டுடன் 40 வருடங்கள் பூர்த்தியாவதுடன் கொழும்பில் அதன் பணிகள் தொடங்கி இவ்வாண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதனால் இவ்வாண்டுக் கம்பன் விழா கொழும்புக் கம்பன் கழகத்தின் வெள்ளி விழாவாக மிகப் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.
 
முதல் நாளான இன்று வெள்ளி மாலை 5.00 மணிக்கு, வெள்ளவத்தை, இராமகிருஷ்ண தோட்டம், இல. 12 இல் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்யலஷ்மி கோயிலிலிருந்து கம்பன் திருவுருவப் படமும் சீதா, இராம விக்கிரகங்களும் ஊர்வலமாக விழா மண்டபம் நோக்கி எடுத்து வரப்படுகின்றன. இந்த ஊர்வலத்தில் நம் நாட்டின் பல பாகங்களிலிருந்து வருகை தரும் பிரமுகர்களும் இந்தியா, மலேசியா, அவுஸ்திரேலிய, பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள அறிஞர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இலங்கையின் பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்களின் மங்கள இசையும், கல்லூரி மாணவர்களின் கீழைத்தேய வாத்திய இசையும், மங்கையர்களின் நிறைகுட பவனியும், நடன மங்கையர்களின் அபிநய பவனியுமாக ஊர்வலம் சிறப்புற நடைபெறவுள்ளது.
 
மாலை 5.30 மணிக்கு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இவ்விழாவின் திருநாள் மங்கல நிகழ்வை திருக்கேதீஸ்வரர் ஆலயத் திருப்பணி சபையின் இணைச்செயலர் திருமதி அபிராமி கயிலாசபிள்ளை மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க, யாழ். மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கொழும்புக் கம்பன்கழகப் பெருந்தலைவருமான ஜெ. விஸ்வநாதன் தலைமையேற்று நிகழ்வுகளை நடத்தவுள்ளார்.
 
மலேசிய நாட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறையின் முன்னாள் பிரதியமைச்சரான மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணனும், புதுச்சேரி சட்டசபையின் சபாநாயகர். வி.பி.சிவக்கொழுந்துவும், இந்தியப் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தற்போதைய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினருமான இல. கணேசனும் இம்முறை விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
 
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், முன்னாள் அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், வடமாகாண சபை முன்னாள் அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி. சரவணபவன், கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க, சைவமங்கையர் கழகத் தலைவி திருமதி சிவானந்தி துரைசாமி, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், சு. அருமைநாயகம் முதலிய பிரமுகர்கள் பலரும் இவ்வாண்டு விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
 
இவ்வாண்டுக் கம்பன் விழாவில் கொழும்பு கம்பன் கழக வெள்ளி விழா மலரும், அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் பதினைந்தாண்டின் நிழற்படத் தொகுப்பும், கம்பன் விழா 2018, இசைவிழா 2018, 2019 ஆகியவற்றின் இறுவட்டுகளும் வெளியிடப்படவுள்ளன.
 
கழகத்தின் இவ்வாண்டு விழாவில் சமூக நிறுவனங்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ்ப்பட்டிருந்தும் கல்வியில் சாதனை செய்த மாணவர்கள், வளர்ச்சிக்கான துணை தேவைப்படும் குடும்பங்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் நிதியுதவிகளும் வழங்கப்படவுள்ளன.
 
இவ்வாண்டு கம்பன் புகழ் விருது பெறும் பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆவார்.
 
கொழும்புக்கம்பன் கழகம் உலகளாவித் தமிழ்ப்பணி செய்த சான்றோர் ஒருவருக்கு கம்பன் புகழ் விருதினை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. வி.ரி.வி. பவுண்டேஷன் நிறுவியுள்ள வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை நினைவு அறக்கட்டளை வழங்கும் கம்பன்புகழ் விருது பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு அவர்தம் இசைத்தமிழ் பங்களிப்பினை மனங்கொண்டு வழங்கப்படவுள்ளது. விருதுக் கேடயம், பொன்னாடை, இந்தியப் பணம் ரூபா ஒரு இலட்சம், பொற்கிழி ஆகியவற்றுடன் கூடிய இவ்விருதினை, கம்பன்விழாவின் நிறைவு நாளன்று மாலை கழகப் பெருந் தலைவர் ஜெ.விஸ்வநாதன் வழங்கிக் கெளரவிக்கவுள்ளார்.
 
உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா, புகழ்பெற்ற எழுத்தாளர் அ.முத்துலிங்கம் (கனடா), பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார, முன்னாள் பிரதமரின் செயலாளர் வே. சிவஞானசோதி, எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினர் ஏ. எம். நஹியா ஆகியோர் விருது பெறும் உள்நாட்டு பிரமுகர்களாவர்.
 
கம்பன் விழாவில் வருடாந்தம் ஐந்து அறக்கட்டளை விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இவ்வாண்டு நாவலர் நற்பணி மன்றத்தின் தலைவர் அமரர் என். கருணைஆனந்தன் நிறுவியுள்ள நாவலர் விருதினை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த உரையாசிரியரான பள்ளத்தூர் பழ.பழனியப்பனும், தமிழ்நாடு திருக்குவளை இராமஸ்ரீனிவாசன் மங்கையர்க்கரசி நினைவு அறக்கட்டளையினர் நிறுவியுள்ள விபுலாநந்தர் விருதினை நாட்டிய கலாமந்திர் இயக்குநர், நடன ஆசிரியை கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனும், கவிக்கோ அமரர் அப்துல் ரகுமான் (தமிழ்நாடு) நிறுவிய மகரந்தச்சிறகு விருதினை இலங்கையின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீனுக்கும், புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் (தமிழ்நாடு) நினைவாக குடும்பத்தினர் நிறுவியுள்ள நுழைபுலம் ஆய்வு விருதினை பேராசிரியர் ப. புஷ்பரட்ணத்துக்கும், புகழ்பெற்ற தமிழகப் பேராசிரியர் சாலமன் பாப்பையா நிறுவியுள்ள ஏற்றமிகுஇளைஞர் விருதினை எழுத்தாளர் தீபச்செல்வனும் பெற்றுக் கொள்கின்றனர்.
 
அமரர் துரை. விஸ்வநாதன், அமரர் பொன். பாலசுந்தரம், அமரர் இலக்கிய வித்தகர் இ. நமசிவாய தேசிகர் ஆகியோரின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட பேச்சு, கவிதை, திருக்குறள் மனனப் போட்டிகளிலும், இலக்கியப் புரவலர் ஹாசிம் உமரின் ஆதரவுடன் இவ்வாண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய இலக்கியப் பேச்சுப் போட்டியிலும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் பரிசில்களும் இரண்டாம் நாள் விழாவில் வழங்கப்படவுள்ளன.
 
இவ்வாண்டுக் கம்பன்விழாவில் எழிலுரை, நாட்டிய அரங்கம், சுழலும் சொற்போர், வழக்காடு மன்றம், கவிநய அரங்கம், பட்டிமண்டபம், சிந்தனை அரங்கம், கவியரங்கம், இலக்கிய ஆணைக்குழு, கருத்தரங்கம், நாடக அரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
 
இவ்வாண்டு தமிழ்நாட்டு பிரபல தொழிலதிபர் பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி விருந்தினராய்க் கலந்து கொள்வதோடு, விழா நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டின் சிறந்த அறிஞர்களான திருமதி பாரதி பாஸ்கர், திருமதி கே. சுமதி, டாக்டர் பிரியா இராமச்சந்திரன், புலவர் இரெ.சண்முகவடிவேல், புலவர் மா. இராமலிங்கம், பிரபல திரைப்பட பாடலாசிரியர் கலைமாமணி கவிஞர் பிறைசூடன், திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், மதுரை எம். சண்முகம், முனைவர் இரா. மாது, பேராசிரியர் ரெங்கராஜா ஆகியோரும், அவுஸ்திரேலியாவிலிருந்து பேச்சாளர்களான தி. திருநந்தகுமார், க. குமாரதாசன், ஜெ. ஜெயராம் ஆகியோரும், நம்நாட்டைச் சார்ந்த பிரபல பேராசிரியர்கள், அறிஞர்கள், நிர்வாகிகள், சமுதாயப் பிரமுகர்கள், வர்த்தகப் பெருமக்கள் ஆகியோரும் இவ்வாண்டு விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
 
விழா நடைபெறும் ஐந்து நாட்களிலும் மண்டபவாயிலில் அகில இலங்கைக் கம்பன்கழகம் மற்றும் பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகியன புத்தகக் கண்காட்சி நடாத்தவுள்ளன.(thinakaran)

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
மயிலியதனை இந்து மயானத்தில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2024 (திங்கட்கிழமை)
முள்ளிவாய்க்கால் 15 வது ஆண்டு நினைவேந்தல் வாரம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA மாசி மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - பத்மாவதி சுப்ரமணியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
இலவச மரக்கன்றுகள் வழங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
தெய்வேந்திரா ஐயர் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
வல்வெட்டி வேவில் ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2024
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
பேராசிரியர் சிவத்தம்பியின் 92 ஆவது பிறந்த தினம் இன்றாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - மேர்ஷி நிரோசினி சுரேஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
தங்கனின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
புவியியலாளருக்கு உதவும் உராங்குட்டான்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2024 (புதன்கிழமை)
Green layer இன் மரம் வளர்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
குறுத்திரைப்படம் - சம்மட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
தனக்கு சுயமருத்துவம் செய்த குரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம் - நீதிமன்றத்தை நாடிய சமூக அமைப்புக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சோதியாவின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
விளம்பரம் - வீடு விற்பனைக்கு (வல்வெட்டித்துறை)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சின்ன கடற்கரையோரம் சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சோதிசிவம் நினைவாக துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற சிலம்பாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதிவைரவ சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2024 (சனிக்கிழமை)
காண்டாவனம் (அக்னி நட்சத்திரம்) இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2024 (சனிக்கிழமை)
சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2024 (வெள்ளிக்கிழமை)
நாகபட்டினம் காங்கேசந்துறை பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2024 (வெள்ளிக்கிழமை)
துள்ளுகுடியிருப்பு ரோமன் க. த. க பாடசாலைக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2024 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
12131415161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai