ரெயின்போ பவள விழா - மென்பந்தாட்டத்தில் ரேவடி, இளங்கதிர் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2018 (திங்கட்கிழமை)
வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது பவள விழாவை முன்னிட்டு விளையாட்டுப்போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் இன்று வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பமாகியது.
முதலாவது போட்டியில் வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டத்தில் ரேவடி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக ரேவடி விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த சபேசன் தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாவது போட்டியில் வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டத்தில் இளங்கதிர் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தைச் செந்த மயூரன் தெரிவு செய்யப்பட்டார்.
மென்பந்தாட்ட போட்டிகள் தொடர்ந்தும் நாளையும் நடைபெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.