மீண்டும் ஒரு மகோதய புண்ணிய கால தீர்த்தம் 04-02-2019 (தை மாதம் 21ஆம் திகதி) திங்களன்று வரவிருக்கிறது. ஏற்கனவே 08-02-2016 ல் மகோதயமும் (பதின்மூன்று நாட்கள் இடைவெளியில்) 22-02-2016 ல் மகா மகமும் நிகழ்ந்தது. நம்மூர் புனிதப்பட்டது. இரண்டு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ஒரு மகோதய நிகழ்வு நடைபெறவுள்ளது.
அமாவாசை - திங்கட்கிழமை - திருவோண நட்சத்திரம் ஆகியவற்றுடன் "வியாதீபாத யோகமும் இணைந்து வரும் நன்னாளே "மகோதய புண்ணிய திருநாளாகும்.
2016ல் நடைபெற்ற மகோதய நன்னாளில் 13 சுவாமிகள் ஊறணித் தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தமாடிய விபரம் ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம்.
04-02-2019 திங்களன்று நிகழவிருக்கும் "மகோதயம்" நன்னாளிலும் சுவாமி - அம்பாள் - நெடியகாடு பிள்ளையார் உட்பட ஊரிலிருந்து அருள்பாலிக்கும் அனைத்து தெய்வங்களும் சூரியோதயத்தில் ஊறணித் தீர்த்தக் கடற்கரைக்கு வந்து கிஞ்சித் நியூன மஹோதய புண்ணியகாலத் தீர்த்தமாடி ஊரினைப் புனிதமாக்கவிருப்பது நாம் செய்த பூர்வஜென்ம புண்ணிய பலனேயாகும்.
08-02-2016 ல் நடைபெற்ற மகோதய நிகழ்வின் படத் தொகுப்பு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.