10 ஆவது வருடத்தில் வல்வெட்டித்துறைORG - சிறப்பு ஓரங்க நாடகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2021 (திங்கட்கிழமை)
Valvetithurai.ORG ஆனது பத்தாவது வருடத்தில் காலடி எடுப்பதை வாழ்த்தும் முகமாக ஒரு ஓரங்க நாடகத்தை சிவபிரானும், உமாதேவியாரும் வாழ்த்துவதாக அமைத்துள்ளார் மூத்த கலைஞர் கப்டன் சிவகுரு பாஸ்கரன் அவர்கள்
நிலை : பூதகணங்கள் வாத்தியங்கள் வாசிக்க, சப்தரிஷிகள் வேதம் ஓத, நந்தி மத்தளம் வாசிக்க, நாரதர் கானம் இசைக்க, வாணி வீணை வாசிக்க, சப்த கன்னியர் நடனம் ஆட, உமாதேவியார் நமச்சிவாயப் பதிகம் பாட இறைவன் காட்சியளிக்கின்றார்.
சிவன் : (இறைவன் இவை அனைத்திலும் மனம் மகிழ்ந்து அனைவருக்கும் வாழ்த்துக் கூறுகின்றார்.
எங்கும் எதிலும் எப்போதும் வெற்றியே பெற்று எண்ணங்கள் யாவும் வெற்றி பெற என் இதயம் கனிந்த நல்லாசிகள். நலமடைவீர்களாக
நாரதர் : சம்போ மகாதேவா ... சர்வேஸ்வரா ... சமூகத்தை நாடி மீண்டும் ஒரு ஞானப்பழத்துடன் வந்திருக்கின்றேன்.
சிவன் : (சிரித்த வண்ணம்)ம்..... இங்கே மீண்டும் ஒரு கலகத்தை உருவாக்க எண்ணிவிட்டாய் ம்..... கொடு பழத்தை.
உமா : சிவாமி நாரதர் கலக்கம் நன்மையில் முடியும் என்று தானே கூறுவார்கள் . முன்னர் பழம் கொண்டு வந்த பின்னர் தானே குன்று தோறும் குமரன் இருப்பான் என்று உலகத்தோர் முருகனை வழிபடுகிறார்கள்.
சிவன் : உமா சோதனையை நீ நடத்துகிறாயா ? அல்லது நானே நடத்தட்டுமா ?
உமா : சுவாமி ... சோதனை வைப்பதில் நீங்கள் தான் வல்லவர். ஆதலால் நீங்களே சோதனையை நடத்துங்கள்.
சிவன் : விநாயக ..... முருகா ...
(இருவரும் தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் சிவனையும், உமாதேவியாரையும் நோக்கி ஓடி வருகின்றனர்.)
விநாயகர் : (சிவன் கையில் இருக்கும் ஞானப் பழத்தைப் பார்த்து) ஓ... நாரதர் கொண்டு வந்தாரா ...
சிவன் : விநாயக.... முருகா.. முன்பு போலவே நான் ஒரு சோதனை நடத்தப்போகிறேன். அதில் வெற்றி பெறுபவர்க்ளுக்கு தான் இந்த ஞானப்பழம்
முருகன் : சோதனையைச் சொல்லுங்கள் தந்தையே
சிவன் : சோதனை ஒன்றும் புதிதல்லை ... அதே சோதனை தான் யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ. அவர்களுக்கு தான் இந்த ஞானப்பழம் . ஆனால் ... ஒரு நிபத்தனை
விநாயகர் : என்ன நிபந்தனை? சொல்லுங்கள் தந்தையே.
சிவன் : உலகத்தை யார் புதிய முறையில் சுற்றி வருகின்றார்களோ அவர்களுக்குத் தான் வெற்றி. கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள் . புதுமையாக இருக்க வேண்டும்.
விநாயகர் : புதுமையாக இருக்க வேண்டுமா ?.... சற்று சிந்திக்க வேண்டும். (என்று கூறிய படி சென்று மல்லாக்கப் படுத்துக்கொண்டு அட்டணக்கால் போட்ட வண்ணம் சிந்திக்கின்றார்.)
முருகன் : (கையில் கையடக்கத் தொலைபேசியுடன் நாரதரிடம் சென்று)நாரதரே .... இணைய வலயத்துள் சென்று வல்வெட்டித்துறை.Orgயைப் பார்த்தால் உலகத்தைச் சுற்றி வந்தது போல் இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.
நாரதர் : முருகா ........... நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு வீதம் சரி என்பதும் தான் என்னுடைய கருத்தும். அது மட்டுமல்ல வேலவா… இந்த வல்வெட்டித்துறை மக்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் வல்வெட்டிதுறையிலும் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளை மிகத் துல்லியமாக உடனுக்குடன் அறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது என்பதும் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.
முருகன் : நன்றி நாரதரே....(தந்தையிடம் திரும்பி) தந்தையே நீங்களும் கேட்டுக்கொண்டு தானே இருந்தீர்கள்.(கையடக்கத் தொலைபேசியைக் காட்டிய வண்ணம்)இதோ வல்வெட்டித்துறை.Org நான் பார்த்துவிட்டேன். ஆதலால் உலகத்தைச் சுற்றி வந்துவிட்டேன். வெற்றி எனக்குத் தான். பழமும் எனக்குத்தான்.
(சிவன் முருகனிடம் பழத்தைக் கையளிக்கின்றார்.)
(இவற்றை அவதானித்த விநாயகர்)
விநாயகர் : தாயே .... இங்கு என்ன நடக்கின்றது . சும்மா தொலைபேசியை நோண்டுவதில் என்ன புதுமை இருக்கின்றது.
உமா: எனக்கும் ஒன்றும் புரியவில்லை. இணைய வலயத்துள் சென்று வல்வெட்டித்துறை.Org யைப் பார்த்தால் உலகத்தைச் சுற்றியது போல் தானே என்று வேலன் கேட்டான். எல்லோரும் சம்மதித்தார்கள். தந்தையும் பழத்தை முருகனிடமே கொடுத்துவிட்டார்.
விநாயகர்: தாயே .... நீங்கள் முன்பு தம்பிக்கு சொன்னதையே இப்பொழுது எனக்கும் சொல்கிறீர்கள். உங்களிடம் கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை .
முருகன் : அண்ணா ... நான் சும்மா தொலைபேசியை நோண்டிக் கொண்டு இருப்பதாகத் தானே நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் . இங்கே வாருங்கள் நான் விபரமாக காட்டுகின்றேன்.
விநாயகர் : (முருகன் அருகில் வந்து) ஆ...... காட்டு தம்பி
முருகன் : பாருங்கள் அண்ணா . இது தான் வல்வெட்டித்துறை.Org. பார்த்தீர்களா , செய்திகள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் இருக்கிறது. எங்களுடைய திருவிழா படங்கள், கட்டுரைகள் எல்லாம் இருக்கின்றன. மேலும் கப்பல் சம்பந்தமான விபரங்கள் என்று அனைத்தும் இருக்கின்றன. இதன் சிறப்பம்சம் "ஆதவன் பக்கம்” என்கிற பதிவு. அதில் பலரும் அறியாத விடயங்களைப் பலவாறாக அலசி ஆராய்ந்து நன்றாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அண்ணா ஒரு முறை என்னுடைய செல்வசன்னிதியில் இருக்கும் “சன்னிதியான் ஆச்சிரமத்திற்கு சுகாதார பரிசோதகரால் தடைபோடப்பட்டது . அது சரிதான் என்று மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அது எனக்கு சரியாகவே தோன்றியது. அது நடந்து சில நாட்களின் பின்னர் அரசாங்கம் மதுபானக் கடையைத் திறந்தது. அங்கு மதுப்பிரியர்கள் எந்தவித சுகாதார வழிமுறைகளையும் கடைப்பிடிக்காது கடைகளின் முன்னால் குழுமி நின்றனர். இதைப் படம் பிடித்து FB யில் நெற்றிசன்கள் போட்டார்கள்
விநாயகர்: தம்பி ... கொஞ்சம் இரு . அது என்ன FB , நெற்றிசன்
மூர்க்கன் : அண்ணா..... FB என்றால் Fece book தமிழில் முகப்புத்தகம். நெற்றிசன் என்றால் 'Net ' ஐப் பாவிக்கும் அனைவரும்.
விநாயகர் : ஆ....சரி மேலே சொல்லு தம்பி
முருகன் : ஆனால் ஏனோ தெரியவில்லை “ஆதவன் பக்கத்தில்" இது பற்றி மூச்சே விடவில்லை.
விநாயகர் : தம்பி இப்பத்தான் என்க்கு புரிந்த்து . நானும் இன்மேல் வல்வெட்டித்துறை.Org யைப் பார்க்கப் போகின்றேன். தந்தையே எனக்கும் ஒரு தொலைபேசி வாங்கிக் கொடுங்கள் .
சிவன் : விநாயகா.... நல்ல வேளை நீயும் கோபித்துக் கொண்டு ஓடாமல் விட்டாய். (சிவன் நாரதரைப் பார்த்து) என்ன நாரதா நீ வந்த வேலை சுகமாக முடிந்து அல்லவா ....
நாரதர்: சர்வேஸ்வரா .... வல்வெட்டித்துறை.Org பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பழத்தையும் கொண்டு இங்கு வந்தேன் எல்லாம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
எல்லா வல்ல இறைவா வல்வெட்டித்துறை.Org தனது 10வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது. ஆதலால் உமையவளும், நீங்களும் அவர்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்தியருள வேண்டும் இறைவா.
சிவன் : நல்லது நாராதா.
சிவன், உமை : வல்வெட்டித்துறை.Org இன்னும் பல தசாப்தங்கள் தங்கள் பணியைச் சிறப்புறச் செய்ய மனதார நாங்கள் வாழ்த்துகிறோம்.
அவர்களுக்கு எங்களது அருளும் ஆசியும் எப்பொழுதும் இருக்கும்.
வல்வெட்டித்துறை.Org வாழ்க நீடூழி ........
(நாரதர் வந்த காரியம் சிறப்புற முடிந்த மகிழ்ச்கியில் இறைவனை வணங்கி விடைபெற்றுச் செல்கின்றார்.)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
K.Rajenthran (New Zealand 35)
Posted Date: October 24, 2021 at 08:33
பாஸ்கரி அண்ணா,
நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
ஆதவனின் பணி தொடர வாழ்த்துக்கள்.
Anbu Anpalahan (Australia)
Posted Date: October 19, 2021 at 08:04
பல பல ஆயிரம் Valvettiturai ORG ஐ பார்க்கும் மக்களில் தினமும் பார்க்கும் நானும் ஒருவன். Valvettiturai ORG ன் சேவை அளப்பரியூது உங்கள் சேவை தொடரட்டும்.
Hi Kunchu Anna,
அருமை அருமை இப்போதய காலத்துக்கு ஏற்ற வகையில் எளிதாக அமைத்துள்ளது.
இளம் சமுதாயம் இதை மிகவும் விரும்பும்.
தொடரட்டும் உங்கள் சேவை.
S.சிவநேசன் (Srilanka)
Posted Date: October 18, 2021 at 08:18
நவரச நாயகன் Capt சி.பாஸ்கரனுடைய வாழ்த்துரை மிகவும் புதுமையாகவும் ிி
ரசிக்ககூடியதாகவும் , சொல்ல வேண்டிய கருத்தை மிகவும் அருமையான முறையில் பகிர்ந்து வாழ்த்நன்றிதுக்கள் கூறியிருக்கிறார்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.