Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

10 ஆவது வருடத்தில் வல்வெட்டித்துறைORG - சிறப்பு ஓரங்க நாடகம்

பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2021 (திங்கட்கிழமை)

Valvetithurai.ORG ஆனது பத்தாவது வருடத்தில் காலடி எடுப்பதை வாழ்த்தும் முகமாக ஒரு ஓரங்க நாடகத்தை சிவபிரானும், உமாதேவியாரும் வாழ்த்துவதாக அமைத்துள்ளார் மூத்த கலைஞர் கப்டன் சிவகுரு பாஸ்கரன் அவர்கள்  

வல்வெட்டித்துறை.ORG (ஓரங்க நாடகம்)

காட்சி

களம் : கைலாசம்

பாத்திரங்கள் : சிவன், உமாதேவியார், பிள்ளையார், முருகன், வாணி, நந்தி, நாரதர், பூதகணங்கள், சப்த கன்னிகள், முனிவர்கள்

நிலை : பூதகணங்கள் வாத்தியங்கள் வாசிக்க, சப்தரிஷிகள் வேதம் ஓத, நந்தி மத்தளம் வாசிக்க, நாரதர் கானம் இசைக்க, வாணி வீணை வாசிக்க, சப்த கன்னியர் நடனம் ஆட, உமாதேவியார் நமச்சிவாயப் பதிகம் பாட இறைவன் காட்சியளிக்கின்றார்.

சிவன் : (இறைவன் இவை அனைத்திலும் மனம் மகிழ்ந்து அனைவருக்கும் வாழ்த்துக் கூறுகின்றார்.

                   எங்கும் எதிலும் எப்போதும் வெற்றியே பெற்று எண்ணங்கள் யாவும் வெற்றி பெற என் இதயம் கனிந்த                       நல்லாசிகள். நலமடைவீர்களாக

நாரதர் : சம்போ மகாதேவா ... சர்வேஸ்வரா ... சமூகத்தை நாடி மீண்டும் ஒரு ஞானப்பழத்துடன்                                                      வந்திருக்கின்றேன்.

சிவன் : (சிரித்த வண்ணம்) ம்..... இங்கே மீண்டும் ஒரு கலகத்தை உருவாக்க எண்ணிவிட்டாய் ம்..... கொடு                                  பழத்தை.

உமா : சிவாமி நாரதர் கலக்கம் நன்மையில் முடியும் என்று தானே கூறுவார்கள் . முன்னர் பழம் கொண்டு வந்த                    பின்னர் தானே குன்று தோறும் குமரன் இருப்பான் என்று உலகத்தோர் முருகனை வழிபடுகிறார்கள்.

சிவன் : உமா சோதனையை நீ நடத்துகிறாயா ? அல்லது நானே நடத்தட்டுமா ?

உமா : சுவாமி ... சோதனை வைப்பதில் நீங்கள் தான் வல்லவர். ஆதலால் நீங்களே சோதனையை நடத்துங்கள்.

சிவன் : விநாயக ..... முருகா ...

(இருவரும் தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் சிவனையும், உமாதேவியாரையும் நோக்கி ஓடி வருகின்றனர்.)

விநாயகர் : (சிவன் கையில் இருக்கும் ஞானப் பழத்தைப் பார்த்து) ஓ... நாரதர் கொண்டு வந்தாரா ...

சிவன் : விநாயக.... முருகா.. முன்பு போலவே நான் ஒரு சோதனை நடத்தப்போகிறேன். அதில் வெற்றி                                         பெறுபவர்க்ளுக்கு தான் இந்த ஞானப்பழம்

முருகன் : சோதனையைச் சொல்லுங்கள் தந்தையே

சிவன் : சோதனை ஒன்றும் புதிதல்லை  ... அதே சோதனை தான் யார் உலகத்தை முதலில் சுற்றி                                                     வருகிறார்களோ. அவர்களுக்கு தான் இந்த ஞானப்பழம் . ஆனால் ... ஒரு நிபத்தனை 

 விநாயகர் : என்ன நிபந்தனை? சொல்லுங்கள் தந்தையே.

சிவன் : உலகத்தை யார் புதிய முறையில் சுற்றி வருகின்றார்களோ அவர்களுக்குத்  தான் வெற்றி. கவனமாக                          கேட்டுக் கொள்ளுங்கள் . புதுமையாக இருக்க வேண்டும்.

விநாயகர் : புதுமையாக இருக்க வேண்டுமா ?.... சற்று சிந்திக்க வேண்டும். (என்று கூறிய படி சென்று                                                  மல்லாக்கப் படுத்துக்கொண்டு அட்டணக்கால் போட்ட வண்ணம் சிந்திக்கின்றார்.)

முருகன் : (கையில் கையடக்கத் தொலைபேசியுடன் நாரதரிடம் சென்று) நாரதரே .... இணைய வலயத்துள்                                    சென்று வல்வெட்டித்துறை.Orgயைப் பார்த்தால் உலகத்தைச் சுற்றி வந்தது போல் இருக்கும் என்று                                 நான் நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.

நாரதர் : முருகா ........... நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு வீதம் சரி என்பதும் தான் என்னுடைய கருத்தும்.                                     அது மட்டுமல்ல வேலவா… இந்த வல்வெட்டித்துறை மக்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும்                       வல்வெட்டிதுறையிலும் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளை மிகத் துல்லியமாக                                    உடனுக்குடன் அறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது என்பதும் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.

முருகன் : நன்றி நாரதரே.... (தந்தையிடம் திரும்பி) தந்தையே நீங்களும் கேட்டுக்கொண்டு தானே இருந்தீர்கள்.                            (கையடக்கத் தொலைபேசியைக் காட்டிய வண்ணம்) இதோ வல்வெட்டித்துறை.Org நான்                                                   பார்த்துவிட்டேன்.  ஆதலால் உலகத்தைச் சுற்றி வந்துவிட்டேன். வெற்றி எனக்குத் தான். பழமும்                                       எனக்குத்தான்.

(சிவன் முருகனிடம் பழத்தைக் கையளிக்கின்றார்.)

(இவற்றை அவதானித்த விநாயகர்)

விநாயகர் : தாயே .... இங்கு என்ன நடக்கின்றது . சும்மா தொலைபேசியை நோண்டுவதில் என்ன புதுமை                                         இருக்கின்றது.

உமா: எனக்கும் ஒன்றும் புரியவில்லை. இணைய வலயத்துள் சென்று வல்வெட்டித்துறை.Org யைப் பார்த்தால்                 உலகத்தைச் சுற்றியது  போல் தானே என்று வேலன் கேட்டான். எல்லோரும் சம்மதித்தார்கள். தந்தையும்                    பழத்தை முருகனிடமே  கொடுத்துவிட்டார்.

விநாயகர்: தாயே .... நீங்கள் முன்பு தம்பிக்கு சொன்னதையே இப்பொழுது எனக்கும் சொல்கிறீர்கள். உங்களிடம்                        கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை .

முருகன் : அண்ணா ... நான் சும்மா தொலைபேசியை நோண்டிக் கொண்டு இருப்பதாகத் தானே நீங்கள்                                         நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் . இங்கே வாருங்கள் நான் விபரமாக காட்டுகின்றேன்.

விநாயகர் : (முருகன் அருகில் வந்து) ஆ...... காட்டு தம்பி

முருகன் : பாருங்கள் அண்ணா . இது தான் வல்வெட்டித்துறை.Org. பார்த்தீர்களா , செய்திகள் தமிழ், ஆங்கிலம்                         இரண்டிலும் இருக்கிறது. எங்களுடைய திருவிழா படங்கள், கட்டுரைகள் எல்லாம் இருக்கின்றன.                                  மேலும் கப்பல் சம்பந்தமான  விபரங்கள் என்று அனைத்தும் இருக்கின்றன. இதன் சிறப்பம்சம்                                    "ஆதவன் பக்கம்”  என்கிற பதிவு. அதில் பலரும் அறியாத விடயங்களைப் பலவாறாக அலசி ஆராய்ந்து                      நன்றாகப்  பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  

             அண்ணா ஒரு முறை என்னுடைய செல்வசன்னிதியில் இருக்கும் “சன்னிதியான் ஆச்சிரமத்திற்கு                                   சுகாதார பரிசோதகரால் தடைபோடப்பட்டது . அது சரிதான் என்று மிக அழகாக பதிவு                                                       செய்யப்பட்டிருந்தது. அது எனக்கு சரியாகவே தோன்றியது. அது நடந்து சில நாட்களின் பின்னர்                           அரசாங்கம்  மதுபானக் கடையைத் திறந்தது. அங்கு மதுப்பிரியர்கள் எந்தவித சுகாதார வழிமுறைகளையும்            கடைப்பிடிக்காது கடைகளின் முன்னால் குழுமி  நின்றனர். இதைப் படம் பிடித்து FB யில் நெற்றிசன்கள்                       போட்டார்கள்

விநாயகர்: தம்பி ... கொஞ்சம் இரு . அது என்ன FB , நெற்றிசன்

மூர்க்கன் : அண்ணா..... FB என்றால் Fece book தமிழில் முகப்புத்தகம். நெற்றிசன்  என்றால் 'Net ' ஐப் பாவிக்கும்                         அனைவரும்.

விநாயகர் : ஆ....சரி மேலே சொல்லு  தம்பி

முருகன் : ஆனால் ஏனோ தெரியவில்லை “ஆதவன் பக்கத்தில்"  இது பற்றி மூச்சே விடவில்லை. 

விநாயகர் : தம்பி இப்பத்தான் என்க்கு புரிந்த்து . நானும் இன்மேல் வல்வெட்டித்துறை.Org யைப் பார்க்கப்                                         போகின்றேன். தந்தையே எனக்கும் ஒரு தொலைபேசி வாங்கிக் கொடுங்கள் .

சிவன் : விநாயகா.... நல்ல வேளை நீயும் கோபித்துக் கொண்டு ஓடாமல் விட்டாய். (சிவன் நாரதரைப்                                           பார்த்து) என்ன நாரதா நீ வந்த வேலை சுகமாக முடிந்து அல்லவா ....

நாரதர்: சர்வேஸ்வரா .... வல்வெட்டித்துறை.Org பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்                                                      என்பதற்காகத்தான் இந்த பழத்தையும் கொண்டு இங்கு வந்தேன் எல்லாம் வெற்றிகரமாக                                               முடிவடைந்துள்ளது.

                எல்லா வல்ல இறைவா வல்வெட்டித்துறை.Org தனது 10வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது.                              ஆதலால்        உமையவளும்,  நீங்களும் அவர்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்தியருள வேண்டும்                                 இறைவா.

சிவன் : நல்லது நாராதா.

சிவன், உமை : வல்வெட்டித்துறை.Org இன்னும் பல தசாப்தங்கள் தங்கள் பணியைச் சிறப்புறச் செய்ய மனதார                                  நாங்கள் வாழ்த்துகிறோம்.

                              அவர்களுக்கு எங்களது அருளும் ஆசியும் எப்பொழுதும் இருக்கும்.

                               வல்வெட்டித்துறை.Org வாழ்க நீடூழி ........

(நாரதர் வந்த காரியம் சிறப்புற முடிந்த மகிழ்ச்கியில் இறைவனை வணங்கி விடைபெற்றுச் செல்கின்றார்.)

நாரதர் :  சம்போ மகாதேவா..... சம்போ மகாதேவா .....

                                       திரை

நவரச நாயகன் Capt.சி.பாஸ்கரன் 

வல்வை ஹெலியன்ஸ் நண்பன் 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
K.Rajenthran (New Zealand 35) Posted Date: October 24, 2021 at 08:33 
பாஸ்கரி அண்ணா,
நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
ஆதவனின் பணி தொடர வாழ்த்துக்கள்.

Anbu Anpalahan (Australia) Posted Date: October 19, 2021 at 08:04 
பல பல ஆயிரம் Valvettiturai ORG ஐ பார்க்கும் மக்களில் தினமும் பார்க்கும் நானும் ஒருவன். Valvettiturai ORG ன் சேவை அளப்பரியூது உங்கள் சேவை தொடரட்டும்.
Hi Kunchu Anna,
அருமை அருமை இப்போதய காலத்துக்கு ஏற்ற வகையில் எளிதாக அமைத்துள்ளது.
இளம் சமுதாயம் இதை மிகவும் விரும்பும்.
தொடரட்டும் உங்கள் சேவை.

S.சிவநேசன் (Srilanka) Posted Date: October 18, 2021 at 08:18 
நவரச நாயகன் Capt சி.பாஸ்கரனுடைய வாழ்த்துரை மிகவும் புதுமையாகவும் ிி
ரசிக்ககூடியதாகவும் , சொல்ல வேண்டிய கருத்தை மிகவும் அருமையான முறையில் பகிர்ந்து வாழ்த்நன்றிதுக்கள் கூறியிருக்கிறார்.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


 இந்த செய்தி தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்:
10 வது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - என்னவென்று சொல்ல முடியாத ஒரு பிணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2021 (ஞாயிற்றுக்கிழமை)
10 வது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - அகவை ஆனது உனக்கு பத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2021 (ஞாயிற்றுக்கிழமை)
10 ஆவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - வல்வையின் இலத்திரனியல் ஆவணக்காப்பகமாக மிளிரவேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2021 (ஞாயிற்றுக்கிழமை)
வல்வெட்டித்துறை.ORG - வாழிய நீ, வரும் விடியல்கள் இவற்றைச் சாத்தியமாக்கட்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2021 (சனிக்கிழமை)
10 ஆவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - இரண்டாவது நோக்கில் இன்னும் வெற்றிபெறவில்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2021 (சனிக்கிழமை)
பத்தாவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - வாழ்க வளர்க
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2021 (சனிக்கிழமை)
10 ஆவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - பத்தாண்டு கடந்து பயணிக்கும்‌ நம் வல்வெட்டித்துறை.ORG
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2021 (வெள்ளிக்கிழமை)
10 ஆவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - கல்விச் செயற்பாட்டுக்கும் ஆவண செய்யவேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2021 (வியாழக்கிழமை)
10 ஆவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - வரலாறு பதிவாகி பதிவு வரலாறாகிறது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2021 (புதன்கிழமை)
10 ஆவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - ஒன்றிணைக்கும் பதிவுகளை இத்தளமூடு காண்கிறோம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2021 (செவ்வாய்க்கிழமை)
10 ஆவது வருடத்தில் வல்வெட்டித்துறை.ORG - வல்வை தொண்டைமானாறு இணையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/10/2021 (திங்கட்கிழமை)
பத்தாவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - தளர்வின்றி தடம் பதிக்கும் தளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/10/2021 (ஞாயிற்றுக்கிழமை)
10 ஆவது வருடத்தில் வல்வெட்டித்துறை.ORG - இணையத்தின் ஊடாக இதயத்தை இணைத்தாய்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/10/2021 (சனிக்கிழமை)
பத்தாவது வருடத்தில் வல்வெட்டித்துறை.ORG - பத்து வருடங்களாக சிறப்பாக சேவையை ஆற்றிவரும் தளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/10/2021 (வெள்ளிக்கிழமை)
பத்தாவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - பல்கலை மற்றும் பல்துறை வலையமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2021 (வியாழக்கிழமை)
பத்தாவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - ஊர் போய்வந்த ஒரு பரவசம் தோன்றும்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2021 (புதன்கிழமை)
பத்தாவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - நம் தோழனாம் - வல்வை இணையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2021 (செவ்வாய்க்கிழமை)
பத்தாவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - வலைத்தளத்தினூடாக இணைத்து நிற்கும் தளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2021 (திங்கட்கிழமை)
பத்தாவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - தன் பணியைச் சிறப்புற ஆற்றி நூறு ஆண்டுகள் வாழ்க
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2021 (ஞாயிற்றுக்கிழமை)
பத்தாவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - புகழ்பெற்றுப் பெருமைகொள்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/10/2021 (சனிக்கிழமை)
பத்தாவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - பத்து அகவைகள் முன்பு பெத்தது இதை வல்வை நிலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2021 (வெள்ளிக்கிழமை)

பிந்திய 25 செய்திகள்:
"ஈழத்தின் மாமன்னன் பல்லவராயன்" சிலை திறப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 05/06/2024 (புதன்கிழமை)
அறநெறிப் பாடசாலை கையளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/06/2024 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல் - பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2024 (சனிக்கிழமை)
சற்குணராஜா நிமலன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2024 (வியாழக்கிழமை)
அமரர் திரு அம்பிகைபாகர் வேதவனம் - ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2024 (செவ்வாய்க்கிழமை)
இன்றைய நாளில் – உள்நாட்டு யுத்தத்தின் முதலாவது இராணுவ நடவடிக்கை 'ஒபரேஷன் லிபரேஷன்'
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஊரணி வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2024 (சனிக்கிழமை)
புதிய மருத்துவ பீட வாளாகம் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2024 (வெள்ளிக்கிழமை)
முன்னாள் நகரசபை செயலரின் மகள் விபத்தில் மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2024 (வெள்ளிக்கிழமை)
வங்காள விரிகுடாவில் புயலுக்கு ரிமல் எனப் பெயர்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2024 (வியாழக்கிழமை)
வாங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2024 (செவ்வாய்க்கிழமை)
ஊரணி மயானம் சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கடற்கரை சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2024 (சனிக்கிழமை)
15 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2024 (சனிக்கிழமை)
A/L (2026) புதிய வகுப்புகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2024 (சனிக்கிழமை)
கடலுக்குள் நடத்தப்பட்ட கையிறிழுத்தல் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2024 (வெள்ளிக்கிழமை)
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முதல்தடவையாக வீர வணக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
ஆழமான கருத்தைக்கூறும் கார்ட்டூன்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால் நினைவுகளைச் சுமந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2024 (புதன்கிழமை)
மயிலியதனை இந்து மயானத்தில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2024 (திங்கட்கிழமை)
முள்ளிவாய்க்கால் 15 வது ஆண்டு நினைவேந்தல் வாரம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA மாசி மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jun - 2024>>>
SunMonTueWedThuFriSat
      1
23
4
5
6
78
9
10
11121314
15
161718
19
20
21
22
2324
25
26
272829
30      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai