தீருவில் தூபி விவகாரம் - எதிர்த்தவர்கள் முன்வைத்த காரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2018 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் தூபி ஒன்று கட்டுவதற்காக அடிக்கல் நாட்ட முற்பட்ட வேளையில் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
வல்வை நகரசபையில் இது சம்பந்தமான பிரேரணை ஒன்றை முன்னர் கொண்டுவந்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் குறித்த பிரேரணையில், தீருவிலில் முதலில் குமரப்பா மற்றும் புலேந்திரன் ஞாபகார்த்த தூபியைக் கட்டுவதெனவும் அதனைத் தொடர்ந்து உள்நாட்டு யுத்தத்தில் இறந்த அனைவருக்குமான தூபி ஒன்றைக் கட்டுவது எனவும் தெரிவித்திருந்தனர்.
பிரேணையை கருத்திற்க் கொண்ட நகரசபையின் இதர கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் இன்று நிகழ்வு ஆரம்பித்த பொழுது இதற்கு எதிராக திரண்டனர்.
தீருவிலில் ஏனையவர்களுக்கு தூபி அமைப்பதில் பொதுமக்கள் தரப்பில் பொதுவாக அதிருப்தி நிலவி வந்ததுடன், மேலும் எந்தவொரு தூபியையும் தற்போதைய சூழலில் அமைப்பதை விரும்பியிருக்கவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.