தீருவில் தூபி விவகாரம் - இடம்பெற்ற இரு கசப்பான சம்பவங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2018 (வெள்ளிக்கிழமை)
கடந்த 05.10.1987 அன்று பலாலியில் சயனைட் அருந்தி மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் ஞாபகார்த்த தூபி அமைந்திருந்த வல்வெட்டித்துறை தீருவில் வெளியில், பன்னிருவர் ஞாபகார்த்த தூபிக்கான அடிக்கல் நாட்ட முயற்சி எடுக்கப்பட்டது.
வல்வை நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 2 தூபி என்னும் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்த நகரசபை இதர உறுப்பினர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதேவேளை இந்த முயற்சிக்கு எதிராக வல்வெட்டித்துறை போலீசார் நீதிமன்றில் தடை உத்தரவு (Stay order) பெற்றுக் கொண்டு அடிக்கல் நாட்டும் வைபவத்தை நிறுத்தினர்.
இதற்கிடையில் தடையுத்தரவு பெறுவதற்கு காரணம் ஒரு நகரசபை உறுப்பினரே எனக் கூறியதால் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த நகரசபை உறுப்பினர், இவ்வாறு கூறியதாகக் கூறப்பட்ட இன்னொமொரு நகரசபை உறுப்பினர் கைகளால் தாக்கினார். ஆனாலும் சுற்றவர நின்ற பொதுமக்கள் தொடர்ந்து சண்டை நிகழாவண்ணம் தடுத்தனர்.
நிகழ்வின் முடிவில், எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் சிலர் அங்கு வைக்கப்பட்டிருந்த கும்பம் மற்றும் விளக்குகளை தாக்கி வீழ்த்தியுள்ளனர்.
இன்றைய நிகழ்வை செய்தியாக்க பல ஊடகத்துறையினர் பிரசன்னமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.