தமிழரசுக்கட்சி, ஈபிடிபி சந்திப்பு - இணையத்தில் அதிகம் வைரலான படம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2025 (திங்கட்கிழமை)
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கடந்த 5 ஆம் திகதி, இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பு, தமிழ் அரசியல் பரப்பிலும், இணையத்திலும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ள அதே வேளை, சமூக வலைத் தளங்களிலும் பெரும் பேசுப் பொருளாக அமைந்திருந்ததுடன், தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஈ.பி.டி.பி யின் சின்னமான வீணையை கையில் வைத்திருப்பதைப் போன்ற குறித்த படமும் அதிகம் பக்கிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.