இன்றைய நாளில் வல்வையில் - தீருவிலில் அஞ்சலி செலுத்தினார் பிரபாகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2024 (திங்கட்கிழமை)
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் 7 ஆம் திகதி மாலை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதிக்கு பிரபாகரன் அவர்கள் வருகை தந்திருந்தார்.
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் திகதி பலாலியில் சயனைற் என்னும் நஞ்சு உட்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான புலேந்திரன் மற்றும் குமரப்பா உட்பட்ட பன்னிரண்டு விடுதலைப் புலிகள் மரணமடைந்திருந்தனர்.
இவர்களின் இறுதிக் கிரியைகள் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் 7 ஆம் திகதி மாலை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதியில் இடம்பெற்றது.
நஞ்சருந்தி மரணித்த புலேந்திரன், குமரப்பா உட்பட்ட பன்னிருவருக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக பிரபாகரன் அவர்கள் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த தீருவில் பகுதிக்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தியதாகக் கூறப்படுகின்றது.
தீருவிலில் அஞ்சலி செலுத்தும் திரு.பிரபாகரன்
மேலும் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபாகரன் அவர்கள், வல்வையில் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக இவ்வாறு தோன்றியமை அதுவே முதற் தடவை என்றும் கூறப்படுகின்றது.
வல்வையில் மிக அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.