இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் 24 மணித்தியால அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமுத்திர பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 106 எனும் அவசர எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடல்சார் பேரிடர் சூழ்நிலைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கு இதனூடாக முடியுமெனவும் அமைச்சு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
பொதுமக்கள், கடற்படையினர் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு உடனடி மற்றும் நேரடி தொடர்பு அமைப்பை வழங்குவதன் மூலம் கடலோர காவற்படையினரின் செயற்பாட்டு தயார்நிலையை மேம்படுத்த இது உதவுமெனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
இலங்கையின் கடற்கரையோரப் பாதுகாப்பு மற்றும் கடல் சூழலைப் பாதுகாப்பதில் பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், கடலில் உயிரையும் சொத்துக்களையும் பாதுகாப்பது, எண்ணெய் கசிவு மேலாண்மையில் முதல் பதிலளிப்பவராகப் பதிலளிப்பது, போதைப்பொருள் மற்றும் மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவது மற்றும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை நடத்துவது உள்ளிட்ட கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தீவிரமாக பங்களிக்க முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.