இந்தியாவின் முன்னாள் பிரதமமந்திரி ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என இந்திய ஆங்கில நாளிதழ் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்” (Indian express) செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த குற்றவாளிகளின் கருணை மனு பரிசீலிப்பில் தாமதம் ஏற்படுவதான் காரணமாகவே, மரண தண்டணையானது, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் இந்தியாவின் முன்னாள் பிரதமமந்திரி ராஜீவ்காந்தி அவர்கள் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்ததும், இந்தக் கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், ஆகியோருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவர்களில் இலங்கையச் சேர்ந்த நளினியின் மரண தண்டணை ஏற்கனவே ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்ததும் மேலும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.