கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டி - உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/05/2026 (வியாழக்கிழமை)
வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான 17 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலை அணி மோதியது.
இதில் ஆட்டம் முதல் ஆதிக்கம் செலுத்திய உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி 15:11, 15:08 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
மூன்றாம் இடத்தை வல்வை சிவகுரு வித்தியாலய அணி பெற்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.