வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஏப்ரல் 30 ஆம் திகதி ஆரம்பம், இந்திரவிழா நடைபெறும்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 15 தினங்கள் நடைபெறும் மகோற்சவத்தில் ரதோற்சவம் மே மாதம் 13 ஆம் திகதியும், தீர்த்தோற்சவம் 14 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் சித்திரை மாதத்தில் இரண்டு பெளர்ணமிகள் நிகழ்வதால், இந்த முறை வழமைக்கு மாறாக வருடாந்த மகோற்சவம் சுமார் 2 வாரங்கள் பிந்தி இடம்பெறுகின்றது. இதனால் இலங்கையின் ஏனைய பாகங்களில் வசிக்கும் வல்வை வாசிகளின் வருகை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வல்வையின் மிகப் பெரிய விழாவான ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்தோற்சவம் அன்று மாலை நடைபெறும் இந்திரவிழா இந்த வருடம் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.