வல்வை அம்மன் கோவில் தர்மகர்த்தா சபை தெரிவுக்கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது!
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2014 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தர்மகர்த்தா சபை தெரிவுக்கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது. கடந்த 14 ஆம் திகதி கூட்டப்பட்டிருந்த கூட்டம் ஒரு முடிவிற்கு வரமுடியாமல் இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கூட்டத்தைக் மீண்டும் கூட்டக்கோரி கோரிக்கை விடப்பட்டிருந்தது.
கொம்மந்தறை, கம்பர்மலை உட்பட்ட வல்வையின் 7 கிராமசேவையாளர்கள், மற்றும் குறித்த ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலிருந்தும் தலா 3 உறுப்பினர்களுடான பருத்தித்துறை உதவி அரசாங்க அதிபர் பணிமனையின் சந்திப்பு அண்மையில் இடம்பெற்றிருந்தது.
சந்திப்பில் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களிற்கமைய குறித்த கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்டவர்களிற்கு வாக்களர் அட்டை வழங்கப்படவுள்ளது. இதற்குரிய விண்ணப்பப்படிவங்கள் கிராமசபை உறுப்பினர்கள் ஊடாக தற்பொழுது வழங்கப்பட்டுவருகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசித்திகதி எதிர்வரும் 6 ஆம் திகதியாகும்.
மேலும் கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி கூட்டப்படுவதற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. (விதிகளிற்கமைய குறைந்தது 2 வாரங்கள்). நடைபெறவுள்ள கூட்டத்தில் வாக்களிப்பதற்கு கிராமசேவையாளரினால் வழங்கப்படவுள்ள வாக்காளர்அட்டை அவசியம் என்பதும், கூட்டத்திற்கு மேலும் சில அரச அலுவலகர்கள் சமுகளிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.