மின்னொளியில் ஆரம்பமாகிய தொண்டைமனாறு ஒற்றுமை கரப்பந்துப் போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2014 (சனிக்கிழமை)
தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் தனது 55 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திவரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில், நேற்று கரப்பந்தாட்டங்கள் மின்னொளியில் ஆரம்பித்துள்ளன. நேற்று இரவு சுமார் 0730 மணியளவில், தொண்டைமனாற்றுப் பிள்ளையார் ஆலயமுன்றலில், வல்வையுடன் மோதவிருந்த தொண்டைமனாறு அண்ணா விளையாட்டுக் கழகம் சமுகமளிக்கத் தவறியதனால், வல்வை மற்றும் கெருடாவில் விளையாட்டுக் கழகங்களிற்கிடையிலான காட்சிப் போட்டி இடம்பெற்றது. இந்த ஆட்டத்தில் வல்வை 3 ஆவது சுற்றில் வெற்றிபெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில் ஆவரங்கால் இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை நெடியகாடு மோதியது. இந்த ஆட்டத்தில் ஆவரங்கால் இளைஞர் விளையாட்டுக்கழகம் 2-0 என்ற அடிப்பையில் வெற்றிபெற்றுள்ளது. போட்டிகள் தொடர்ந்து இன்றும் நடைபெறவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.