வல்வை நகரசபை உறுப்பினர்கள் மூவரின் சத்தியாக்கிரகப் போராட்டம் முடிவுக்கு வந்தது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருக்கு எதிராக கொண்டு வந்த பிரேரணையை, நகரசபைத் தலைவர் வாக்கெடுப்பிற்கு விடவில்லை எனக்கூறி, வல்வை நகரசபையின் இதர உறுப்பினர்கள் மூவர், தொடர்ந்து நகரசபை வளாகத்தினுள்ளேயே நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று முன்தினம் முடிவுக்குவந்துள்ளது. மேலும்
Courtesy of Photo - JVP News
தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம் சத்தியாக்கிரகம் இருந்த 3 ஆளும் தரப்பு உறுப்பினர்களுடனும் நேற்று முன்தினம் கலந்துரையாடி, சத்தியாக்கிரகத்தைக் கைவிடுமாறு கோரினார். அவரது கோரிக்கையை ஏற்று சத்தியாக்கிரகத்தை தற்காலிகமாக இடைநிறுத்த சம்மதம் தெரிவித்த 4 உறுப்பினர்களும் சத்தியாக் கிரககத்தை கைவிட்டனர் என அறியப்படுகின்றது..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.