பல நிகழ்வுகளுடன் நடந்தேறிய புலிவேட்டைத் திருவிழா, ஏராளமானோர் கண்டுகளித்தனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2014 (திங்கட்கிழமை)
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 12 ஆம் திருவிழாவான புலிவேட்டைத் திருவிழா நேற்று இரவு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இரவு சுமார் 8 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் ஆரம்பித்திருந்த திருவிழா நள்ளிரவு வரை நீடித்திருந்தது.
புலி வேட்டை நிகழ்வுகள் இரவு 09 மணியளவில் அம்பாள் கிழக்கு வீதிக்கு வந்த பின்னர் ஆரம்பித்திருந்தது. இந்த நிகழ்வில் புலி மற்றும் குட்டிப் புலியுடன் வேடர்கள், மற்றும் மயில் உருவங்கள் என்பனவும் உலா வந்திருந்தன. அத்துடன் வல்வையைச் சேர்ந்த சில இளைஞர்களின் தீப்பந்தம் சுற்றுதல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
மேலும் கண்ணைக் கவரும் வானவேடிக்கைகளும் ஆலயத்தின் கிழக்கு வீதியில் நிகழ்த்தப்பட்டிருந்தன.
நேற்றைய திருவிழாற்கு எதிர்பார்த்ததைப்போல் பக்தர்கள் ஏராளமானவர்கள் வருகை தந்திருந்தனர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.