நேற்றைய போட்டியில் சச்சரவு, திக்கம் இளைஞர் வி.க வெளிநடப்பு, இளவாலை யங்கன்றீஷ் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2013 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் யாழ் மாவட்ட கழகங்களுக்கிடையில் நடாத்திவரும் உதைபந்துச் சுற்றுப்போட்டியின் அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது போட்டி நேற்று மின்னொளியில் நடைபெற்றது.
நேற்று இரவு சுமார் 8 மணியளவில் கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் இளவாலை யங்கன்றீஸ் விளையாட்டுக் கழகங்கத்தை எதிர்த்து திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் மோதியது.
இப்போட்டியின் முதல்பாதியில் இளவாலை யங்கன்றீஸ் விளையாட்டுக் கழகம் 1 கோலினைப் பெற்றிருந்தது. பின்னர் ஆட்டம் முடிவதற்கு சுமார் 10 நிமிடங்கள் முன்பு திக்கம் விளையாட்டுக் கழக வீரர் ஒருவருக்கு எதிராக நடுவரினால் சிவப்பு அட்டை ஒன்று காட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து பார்வையாளர் பக்கமாக ஏற்பட்ட சண்டை ஒன்றையடுத்து ஏற்பட்ட சசச்சரவையடுத்து திக்கம் விளையாட்டுக் கழக வீரர்கள் வெளிநடப்புச் செய்திருந்தனர்
இதனையடுத்து நடுவரினால் இளவாலை யங்கன்றீஸ் விளையாட்டுக் கழகத்துக்கு வெற்றி கொடுக்கப்பட்டிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.