வல்வை சிதம்பராக் கல்லூரியின் மாணவ மாணவிகளும், வல்வை மகளிர் பாடசாலையின் மாணவிகளும் இப்பரீட்சைக்கு, உட்டுப்பிட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலையில் தோற்றமளித்தனர்.
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தில் (VEDA) 16.10.2012 அன்று தொடக்கம் 24.10.2012 வரை நடைபெறும் நவராத்திரிநிகழ்வினை தரம் - 09, தரம் - 10, தரம் - 11 மாணவர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்டு வரும் யாழ் விளையாட்டு கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் நேற்றைய போட்டிகள் தொடர் மழை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.
வழமையை விட சற்று முன்னதாக ஆரம்பித்திருக்கும் வடகிழக்கு பருவப் பெயர்சிக் காலநிலையால்,
நேற்றும், நேற்றைய முன்தினமும் யாழ் தீபகற்பத்தின் பல இடங்களில், வல்வெட்டித்துறை உட்பட, மழை பெய்திருந்தது.
வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டு கழகத்தினால் யாழ் மாவட்டத்தின் விளையாட்டு கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருகின்றது.
சக்தி விரதமாகிய நவராத்திரி விழா அக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமானது. வருகின்ற 23 ஆம் திகதி சூரன்போரும், 24 ஆம் திகதி மானம்புத் திருவிழாவும் வல்வை நெடியகாடு பிள்ளையார் கோவில் வீதியில் நடை பெறவுள்ளது.