வல்வை சிதம்பராக் கல்லூரியின் நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்து மாலை 5 மணி வரை நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு.ராஜதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திரு.R.S.சிவசுப்ரமணியம் (ஓய்வு பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளர்) அவர்கள் பிரதம விருந்தினராகவும், திரு.S.ராமசந்திரன் (கோட்டக் கல்விப் பணிப்பாளர், பருத்தித்துறை) திரு.V.வேலும் மயிலும் (ஓய்வு பெற்ற பிரதேச செயலர்) அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கலாநிதி திரு.அ.சபாராஜேந்திரன் அவர்கள் (ஓய்வு நிலைப் பேராசிரியர், சிங்கப்பூர்) சிறப்புப் பேருரை வழங்கியிருந்தார்.
மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்புவிழாவில், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்திருந்தனர்.
வல்வை சிதம்பராக் கல்லூரி இதே நாளில் 1896 ஆம் ஆண்டு , மதிப்பிற்குரிய திரு.கு.சிதம்பரப்பிள்ளை அவர்களால் 'சிதம்பரா வித்யாலயம்' என ஸ்தாபிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.