பல கின்னஸ் சாதனைகளைப் புரிந்த வல்வையைச் சேர்ந்த திரு.வி.ஸ்.குமார் ஆனந்தனுக்கு (ஆழிக்குமரன் ஆனந்தனுக்கு) வல்வையில் சிலை அமைப்பதற்கான ஆரம்ப முற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரியவருகின்றது.
முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் திரு.M .k .சிவாஜிலிங்கம் இந்தியாவிலிருந்து வெளியாகும் 'இந்து' பத்திரிகைக்கு இது பற்றி அளித்த செய்தியில், வல்வை நகரசபையில் இதுசம்பந்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், சிலை அமைப்பதற்கான பணத்தினை ஆழிக்குமரன் ஆனந்தனின் குடும்பத்தினரிடமிருந்தும் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்தும் பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிலை அமைக்கும் பணிகள் வடகிழக்கு பருவ மழையின் பின்னர் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
மேற்குறிபிட்ட தகவல்கள் எம்மால் உறுதிப்படுத்தப்படுள்ளது.
ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைகளை உள்ளடக்கிய கையெழுத்துச் சஞ்சிகையான 'அலை ஒளி' ஒரு சிறப்பிதழாக 1990 ஆம் வருடம் எம்மால் வெளியிடப்பட்டது இங்கு குறிபிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.