பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் ஒரு பகுதியான, வல்வெட்டித்துறை நகரப் பகுதியினூடாக செல்லும் பாதை புனரமைப்பு அங்குரார்ப்பணம் மற்றும் பொது மக்கள் கலந்துரையாடல் சம்பந்தமான நிகழ்வு நேற்றய தினம் வல்வை சந்தியில் இடம்பெற்றது.
நிகழ்வில் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர், பாராளமன்ற உறுப்பினர் இளங்குமரன், வடமாகாண ஆளுனர் , வீதி அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
சுமார் இரண்டரை மணி நேரங்கள் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், பெரிதும் எதிர்பார்க்கபட்ட வல்வை நகரை யொட்டி அமைந்துள்ள ஒடுங்கலான வீதி அகலிப்பு சம்பந்தமாக எதுவும் பேசப்படவில்லை என்பதுடன், பொது மக்கள் கருத்துக்களும் கேட்கப்படவில்லை என்பது குறிப்படதக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.