புகழ்பெற்ற கல்வியாளர், உரிமைகள் செயற்பாட்டாளர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16வது புதிய பிரதமராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya, சிங்களம்: හරිනි අමරසූරිය, பிறப்பு: 6 மார்ச் 1970) இலங்கை கல்வியாளரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக விரிவுரையாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2024 செப்டம்பர் 24 முதல் இலங்கையின் 16-ஆவது பிரதமராகப் பதவியில் உள்ளார்.
தேசிய மக்கள் சக்தி உறுப்பினரான இவர், செப்டம்பர் 24 முதல் கூடுதலாக நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், முதலீடுகள் ஆகிய அமைச்சுப் பதவிகளையும் வகித்து வருகிறார். அமரசூரிய 2020 முதல் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூகக் கற்கைகளுக்கான மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். இவர் கருத்தியல் ரீதியாக மைய-இடதுசாரியாகவும், தாராளவாதியாகவும் விளங்குகிறார். இவர் இளைஞர்களின் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, சிறுவர் பாதுகாப்பு, இலங்கை கல்வி முறையின் திறமையின்மை ஆகியவை பற்றிய தனது ஆய்வுகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.
சிறிமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஆகியோருக்குப் பின்னர் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் இவராவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.