வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு மாணிக்கவாசகர் ஊர்வலம் இன்று நடைபெற்றது.
விசேட பூசையைத் தொடர்ந்து வல்வை சிவன் ஆலயத்திலிருந்து மாணிக்கவாசகர் புட்கரணி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று சிவபுர வீதி வழியாக வன்னிச்சியம்மன் ஆலயம் சென்று அங்கிருந்து வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயம் சென்றார். திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயத்திலிருந்து சந்தி வழியாக ஆதிவைரவர் ஆலயத்தை அடைந்து பின்னர் அங்கிருந்து தமது ஆலயத்தை நோக்கி திரும்பினார்.
10ஆம் தகதி ஆரம்பமாகும் கொடியேற்றத்தைத் தொடர்ந்து, தேர் திருவிழா புதன்கிழமை (24.03.2024) அன்றும், அதனைத் தொடர்ந்து தீர்த்தத் திருவிழா வியாழக்கிழமை (25.03.2024) அன்றும் நடைபெறவுள்ளது.
வல்வை வைத்தீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெறவுள்ள வருடாந்த கொடியேற்ற உற்சவத்திற்கு முன்னராக, மாரி தேவி உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்று மாணிக்கவாசகர் ஊர்வலம் நடைபெறுவது வழமை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.