முள்ளிவாய்க்கால் கஞ்சி நிகழ்வு இன்று யாழ் வல்வெட்டித்துறையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்களது வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள ஆலடிப் பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கஞ்சி வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
வல்வையில் ஆரம்பமான இன்றைய நிகழ்வைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மருதனார்மடம் சந்தியிலும் காரைநகர் இந்துக் கல்லூரி முன்பாகவும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாகவும் சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது.
புதன்கிழமை (10) காலை கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாகவும் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, மாங்குளத்திலும் வியாழக்கிழமை (11) மன்னாரிலும் வவுனியாவிலும் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை (12) கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் சிவன் கோவில், அன்பொளிபுரம், பத்திரகாளி அம்மன் கோவில், மூதூர் பகுதியிலும் இடம்பெறவுள்ளது. சனிக்கிழமை (13) மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பங்கேற்புடன் வந்தாறுமூலை வளாகம் முன்பாகவும் செங்கலடி, ஆரையம்பதி, மட்டக்களப்பு பிள்ளையார் கோவில் பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை (14) அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் மற்றும் பொத்துவில் பகுதிகளிலும் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து மே 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் பாடசாலைகளுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது. இறுதி யுத்தத்தின் போது, மக்களை பட்டினியில் இருந்து காப்பதற்காக சில தன்னார்வ அமைப்புகள் தம்மிடம் இருந்த அரிசியினை பங்கிட்டு முள்ளிவாய்க்காலில் கஞ்சியாக காய்ச்சி வழங்கினர். இதனை நினைவுப்படுத்தும் வகையில் வருடாந்தம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.