சந்நிதியான் ஆச்சிரமத்தினால் உதவித் திட்டங்கள் வழங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/06/2023 (சனிக்கிழமை)
யாழ் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் திருகோணமலை மற்றும் வவுனியாவில் பல்வேறு உதவித் திட்டங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
திருகோணமலை செல்வநாயகபுரம் பிரதேச வைத்தியசாலையில் மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், மேற்படி வைத்தியாசாலையின் கோரிக்கைக்கு அமைவாக 505400 ரூபா பெறுமதியான மருந்து வகைகள் மேற்படி வைத்தியசாலையின் பெறுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவர் சத்தியசீலனிடம் சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகளால் நேரடியாக வழங்கபப்ட்டது.
இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தினால் வவுனியா கல்லாறு ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்திற்கு 440,520 ரூபா நிதி பங்களிப்பில் குழாய் கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் வசதி வழங்கப்பட்டது. குறித்த உதவித் திட்ட நிகழ்வில் மேற்படி ஆச்சிர முதலவர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டாளர் தயாபரன் மற்றும் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டார்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.