VEDA கல்வி நிலையத்தில் நடைபெற்ற வாணி விழாவும், ஆசிரியர் கெளரவிப்பும்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2013 (திங்கட்கிழமை)
கொற்றங்கலட்டி வேவில் ஒழுங்கையில் அமைந்துள்ள VEDA கல்வி நிலையத்தில் சரஸ்வதி பூசை மற்றும்ஆசிரியர் கெளரவிப்பும் சிறப்பாக நடைபெற்றது.
நவராத்திரி பூசையின் ஆரம்ப நாளான 2013.10.05 அன்று திரு பா.சஜீவன் குருக்கள் அவர்களால் கும்பம் வைக்கப்பட்டு பூசை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து 08 நாட்களும் VEDA கல்வி நிலைய மாணவர்களின் பூசைகள் இடம்பெற்று இறுதி நாள் விஜயதசமி பூசையும் அதனுடன் இணைந்து VEDA கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது 2013.10.14 திங்கட்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் கும்பப்பூசை இடம்பெற்று, பின் 3.30 மணியளவில் VEDA கல்வி நிலைய ஆசான்களுடன் VEDA கல்வி நிலையத்தின் கணக்காய்வாளர் அவர்களும் மாணவர்களால் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு பூக்கள் தூவி கௌரவிக்கப்பட்டார்கள் .
தொடர்ந்து மாணவர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்று பின்னர் ஆசிரியர்களுக்கான மாணவர்களின் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது. அத்துடன் VEDA கல்வி நிலையத்தில் நிர்வாக உத்தியோகத்தர்களிற்கும் மாணவர்களால், நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது. மாணவர்களின் நிகழ்வுகளோடு ஆசிரியர்களும் தமது நிகழ்வுகளையும் வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தியிருந்தனர். இந்நிகழ்வானது மாலை 6.30 மணியளவில் நிறைவடைந்தது.
இந்நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.