வல்வையர்களால் வேஷ்டி அணிந்து 1987 இல் நடாத்தப்பட்ட கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் சூரன் போர், இன்றும் சிறப்புற நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2013 (வெள்ளிக்கிழமை)
சூரன்போர் நாட்டின் பல பாகங்களில் நடைபெற்றுவந்தாலும், வல்வைப் பிரதேசத்தில் அன்று தொட்டு இன்றுவரை நடாத்தப்படுவது தனித்துவமானது. இந்த வகையில் கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் 1987 ஆம் ஆண்டு கந்தசஷ்டி சூரன்போர் நிகழ்வானது, வல்வையில் நிகழ்த்தப்படுவது போல் வேஷ்டி அணிந்து வல்வையர்களால் நடாத்தப்பட்டிருந்தது.
இது கொழும்பில் வசிக்கும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.செல்வம் மற்றும் சில வல்வையர்களின் முயற்சியினால், ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரின் அனுசரணையுடன் நடைபெற்றது. தொடர்ந்தும் சில வருடங்கள் வல்வையைச் சேர்ந்தவர்கள் கந்தசஷ்டி சூரன்போர் நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டிருந்தனர். பின்னர் இது படிப்படியாக மறைந்து விட்டது.
படங்களில் இன்று கந்தசஷ்டி நிகழ்வாக கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சூரன் போரினைக் காணலாம். பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து சூரன் போர் சுமார் 05.00 மணியளவில் நடைபெற்றிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.