பொலிகண்டி கந்தவனம் சுப்பிரமணி சுவாமி கோயிலிலும் நேற்று சூரன்போர் சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2013 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை புற நிலப் பகுதியான பொலிகண்டி கந்தவனம் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா சூரன்போர் இன்று பிற்பகல் சிறப்பாக நடைபெற்றது. கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய கந்தசஷ்டி விழாவின் ஜந்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை சூரன்போர் சிறப்பாக நடைபெற்றது.
கந்தவனம் சுப்பிரமணி சுவாமி கோயிலில் உள்ள ஆறுமுகப் பெருமானுக்கு சிறப்புப்பூசைகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றதைத் தொடர்ந்து ஆறுமுகப் பெருமான் எழுந்தருளி வீதி உலா வந்து சூரனோடு போர் புரியும் நிகழ்வு சுமார் 04:30 மணியளவில் நடைபெற்றது.
பொலிகண்டி கந்தவனம் சுப்பிரமணி சுவாமியின் தீர்த்தத்திருவிழா மற்றும் கொடியிறக்கம் நாளை காலை 09.00 மணிக்கும், மாலை 06.00 மணிக்கும் முறையே இடம்பெறவுள்ளன.
பொலிகண்டி கந்தவனம் சுப்பிரமணி சுவாமி கோவிலானது, வல்வெட்டிதுறைச் சந்தியிலிருந்து கிழக்காக சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் பருத்தித்துறை காங்கேசந்துறை வீதியில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.