இலங்கை சனத்தொகையில் 31 லட்சம் பேர் தமிழர்கள்!- புள்ளி விபரத் திணைக்களம் தகவல்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2013 (புதன்கிழமை)
இலங்கையின் சனத்தொகையில் 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 பேர் தமிழர்கள் என புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் சனத்தொகை மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. மதிப்பீட்டின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு,
இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே இரண்டு லட்சத்து 63723 எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் ஒரு கோடியே 51 லட்சத்து 73820 பேர் சிங்கள மக்களாவர். 18 லட்சத்து 69820 பேர் சோனகர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
33061 பேர் பேர்கர் இனத்தவர்கள். 40189 பேர் மலே இனத்தவர்கள்.
2011 – 2012ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சனத் தொகை மதிப்பீட்டிற்காக 173 கோடி ரூபா செலவாகியுள்ளது.
மதிப்பீடு நடவடிக்கைகளுக்காக 99000 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதேச செயலகங்களும், புள்ளி விபரத் திணைக்களமும் இணைந்து மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
பௌத்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடிய 42 லட்சத்து 21 ஆயிரத்து 844 ஆகும். இந்துக்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 54ஆயிரத்து 606 ஆகும்.
முஸ்லிம்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 67 ஆயிரத்து 227 ஆகும் என புள்ளி விபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 9 ஆயிரத்து 606 என அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.