கலை கலாசார இலக்கிய மன்றத்தின் கலை இலக்கிய பெருவிழா நாளை மறுதினம் நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2013 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 4 வது மாபெரும் கலை இலக்கியப் பெருவிழா நாளை மறுதினம் புது வருடத்தினத்தன்று பிற்பகல் 03.30 மணியளவில் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது.
இக் கலை இலக்கிய விழா வல்வை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் தலைவர் ர .மகிந்தன் அவர்கள் தலைமையில் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் கலாநிதி N. சண்முகலிங்கன் ( துணைவேந்தர், சமூகவியற் பேராசிரியர், சமூகவியற்துறை யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.பா .மீனாட்சி சுந்தரம் (சமாதான நீதவான், வல்வை ஆவணக் காப்பக காப்பாளர் ) அவர்களும் , திரு.சி.சிவபாலசிங்கம் ( முன்னாள் கிராம சேவையாளர் ஜ/393, பொலிகண்டி மேற்கு ) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
அத்துடன் கலைஞர் கெளரவிற்பும் ,அதனைத் தொடர்ந்து நெய்தல் மலர் 4 வது இதழ் வெளியீடும் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து விருது வழங்கல், கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளன.
இக்கலை விழாவிற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வல்வை கலை இலக்கிய மன்றத்தினர் அழைக்கின்றார்கள் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.