லண்டனில் இறந்த பெண்மணி நெடியாகாட்டைச் சேர்ந்த ஜெயவாணி வாகீஸ்வரன், குழந்தைகள் கொலை தொடர்பாக போலீசார் எவரையும் சந்தேகிக்கவில்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2014 (சனிக்கிழமை)
லண்டனில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இறந்த பெண் தனது இரு குழந்தைகளுடன் மரணமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண்மணி வல்வெட்டிதுறை நெடியாகாட்டைச் சேர்ந்த திரு.சக்திவேல் வாகீஸ்வரன் மனைவி ஜெயவாணி வாகீஸ்வரன் எனத்தெரிவிக்கப்படுகின்றது.
மரணமாகியுள்ள குழந்தைகள் 5 வயது மற்றும் 7 மாதங்கள் உடைய ஆண்பிள்ளைகள் ஆகும்.
BBC செய்தி ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி குறித்த 2 குழந்தைகளின் மரணமும் கொலை எனப் புலனாய்வுப் பிரிவினரால் கருதப்படுவதாகவும், ஜெயவாணி வாகீஸ்வரன் தொடர்பாக 3 ஆவது நபர் எவரையும் போலீசார் தற்பொழுது சந்தேகம் கொள்ளவில்லை எனவும் தெரியவருகின்றது.
லண்டனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள குறித்த செய்தி லண்டனில் சகல ஊடகங்களிலும் தற்பொழுது ஒலி, ஒளிபரப்பப்பட்டுவருகின்றன.
ஜெயவாணி வாகீஸ்வரன் தம்பதியினர் கடந்த சில மாதங்களாக வட மேற்கு லண்டனின் Woodgrange Close என்னும் இடத்தில் வசித்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.