வல்வை உதைபந்து இன்றைய ஆட்டத்தில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2014 (வெள்ளிக்கிழமை)
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன், வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் விலகல் முறையிலான உதைபந்து சுற்றுப் போட்டி நேற்று முன்தினம் வல்வையில் ஆரம்பமானது.
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள 32 விளையாட்டுக்கழக அணிகள் பங்குகொள்ளும் இப்போட்டியானது இன்று பிற்பகல் 03.30 மணியளவில் வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதன் வரிசையில் இன்று பிற்பகல் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பொலிகை பாரதி விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் 6:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில் கரவை சுடர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து அல்வாய் நக்கீரன் விளையாட்டுக்கழகம் மோதவிருந்தது. இந்த ஆட்டத்திற்கு அல்வாய் நக்கீரன் விளையாட்டுக்கழகம் சமூகமளிக்காத காரணத்தால் வெற்றி வாய்ப்பு கரவை சுடர் விளையாட்டுக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிநேகித பூர்வ உதைப்பந்தாட்டமாக, வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கரவை சுடர் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் 2:1 என்ற கொள் கணக்கில் வெற்றி பெற்றது.
நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் கலட்டி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இமையாணன் இளைஞர் விளையாட்டுக்கழகமும் , அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சென்பீற்றர்ஸ் விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளன.
இப் போட்டிகள் அனைத்தும் WELLWISH MEDICAL CENTER அனுசரணையுடன் இடம்பெற்று வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.