வல்வை விளையாட்டுக்கழகத்தின் பெருவிழாவை (2014) முன்னிட்டு, வல்வை விளையாட்டுக் கழகத்தில் அங்கம் வகிக்கும் கழகங்களுக்கு இடையிலான கபடி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. இப்போட்டிகளில் ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.
போட்டிகள் யாவும் அண்மையில் திருத்தி வடிவமைக்கப்பட்ட ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது.
வல்வைக்கு உட்பட்ட கழகங்களான வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம், வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம், வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் மற்றும் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழகம் ஆகிய நான்கு விளையாட்டுக்கழகங்கள் போட்டிகளில் பங்குபற்றியிருந்தன.
இறுதிப் போட்டியில் ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 34:25 என்ற புள்ளி அடிப்படையில் வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி, வல்வை விளையாட்டுக்கழகத்தின் பெருவிளையாட்டு 2014 ஆம் ஆண்டிண் கபடி ஆட்டத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது .
இவ் போட்டிகள் அனைத்தும் மின்னொளியில் நடைபெற்றிருந்தது. 1996 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த ரேவடி மைதானம் கடந்த 2011 ஆம் ஆண்டு மீண்டும் இப்பகுதியின் கழக உறுப்பினர்கள் எடுத்த முயற்சியினால் கழக விளையாட்டுப்போட்டி நடாத்த அனுமதிக்கப்பட்டிருந்ததும், 1996 ஆம் ஆண்டிற்கு பின்னர் குறிப்பிடத்தக்க அளவில் வல்வையில் மீண்டும் சிறப்பான முறையில் பலதரப்பு விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.