பிரித்தானியாவில் நிலவி வரும் மோசமான காலநிலையால் கடந்த இரண்டு மாதங்களாக, தென்பகுதி நகரங்களின் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
08/02/2014 வெள்ளிக்கிழமையும் கடும் மழை, கடற்கொந்தளிப்பு காரணமாக கரையோரத்தின் பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த மழையுடன், மணிக்கு 70-80 மைல் வேகத்தில் காற்று வீசுவதாகவும்,கடல் அலைகள் 14மீற்றர் உயரமாக எழுந்து கரையோரப் பகுதிகளைத் தாக்குவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Devon,Cornwall,Bournemouth போன்ற பகுதிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டதுடன், இங்கு நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் கடற்படை வீரர்கள் பலர் அவசர உதவிகளைச் செய்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்று ஞாயிற்றுக்கிழமையும் அதி கூடிய மழை வீழ்ச்சி ஏற்படலாம் எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.