வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை மைதானத்தையொட்டி, ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக உறுப்பினர்களால், மைதானம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எனக் கட்டப்பட்டு வந்த இரண்டாம் திட்ட வேலையான 230 அடி நீளமான அணை வேலைகள் இன்றுடன் பூர்த்தியாகியுள்ளன. குறித்த அணைக்கட்டிற்கு சுமார் 6 லட்சம் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளது. கழக உறுப்பினர்களால் நேரடியாக கட்டப்பட்டதால், சுமார் 4 லட்சம் பெறுமதியான மனித வலு இதில் உள்ளடக்கப்படவில்லை.
இராணுவத்தினர் கடற்கரை மைதானத்தை பொதுமக்கள் பாவனைக்கு அனுமதியளித்த பின்னர், முதல் கட்டமாக கடற்கரை மைதானத்தை துப்பரவாக்கும் பணிகள் சில மாதங்கள் முன்னர் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வேலையான அணைக்கட்டு முடிவுற்ற நிலையில், மூன்றாவது கட்டமாக, குழந்தைகள் பூங்கா (Children Park) ஒன்று அமைக்கும் பணியின் ஆரம்ப வேலைகள் மற்றும் கடற்கரையை துப்பரவாக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கழக அங்கத்தவர்கள் உதவி
குறித்த அணைக்கட்டின் கட்டுமானத்திற்குரிய நிதியுதவிகளை ரேவடி கழகத்தைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் கழக உறுப்பினர்கள் தாமாக முன்வந்து அளித்துக்கொண்டிருப்பதாகவும் விரைவில் முதல் கட்ட வேலைகளிற்காக உதவியவர்களின் விவரங்களுடன், விவரம் வெளியிடப்படும் என ரேவடி கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
நிதியுதவி அளிக்க விரும்பும் கழக உறுப்பினர்கள் தொரபுகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்
1) ஞானக்குட்டி - 00 94 77 31 57 174
அணையின் ஒரு முடிவு
6 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள அணை
துப்பரவுப் பணி மற்றும் அணைக்கான பாதுகாப்பு வேலைகள் - கட்டப்பட்ட அணைக்கு வெளியாக
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.