தென்கொரிய Ferry "Sewol' விபத்து, அணியம் தவிர்ந்த பகுதிகள் கடலுடன் சங்கமம், 9 பேர் பலி,
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2014 (வியாழக்கிழமை)
நேற்று காலை விபத்துக்குள்ளான தென்கொரிய நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் கப்பலான "Sewol" தற்பொழுது கடலினுள் தாண்டுள்ளது. இச் சம்பவத்தில் கப்பலின் கப்டன் உட்பட்ட 9 பேர் பலியாகியுள்ளதுடன் 287 காணாமல் போயிள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தென் கொரியாவின் தலைநகரத்தில் அமைந்துள்ள துறைமுகமான இஞ்ச்சனிலிருந்து (Incheon), உலகின் குறிப்பிடக் கூடிய உல்லாசப் பிரயாணிகள் தீவான ஜேஜூ (Je ju) நோக்கி புறப்பட்டுள்ள இக்கப்பல், தென் கொரியாவின் துறைமுக நகரான மொக்போவிற்கு (Mokpo) தென்மேற்குத் திசையில் விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.
விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனாலும் ஏதோவொரு வெடிப்பினால் கப்பலின் ஒரு பக்கம் கடல் நீரால் மிகவும் வேகமாக நிரம்பியுள்ளது. இது கப்பலை மிக வேகமாக ஒரு பக்கம் சரித்துள்ளதுடன், இது கப்பலின் சமநிலையை (Ship's stability) குழப்பி கப்பலை தாழச் செய்துள்ளது. தற்பொழுது கப்பலின் அணியம் (Bow) தவிர்ந்த பகுதிகள் கடலில் தாண்டுள்ளன.
காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் கொரியாவின் கடலோரப் பாதுகாப்புப் படையினரின் (Korean Coast Gurad) தலைமையின் கீழ் தற்பொழுது தொடர்கின்றது.
1970 ஆம் ஆண்டில் Namyoung என்னும் பயணிகள் கப்பல் விபத்தில் 323 பயணிகள் பலியான சம்பவத்தின் பின்னர் தென் கொரியாவின் கடல் பகுதியில் ஏற்பட்ட பாரிய விபத்தாக இது கருதப்படுகின்றது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.