தொண்டைமனாறு சுண்டிக்குளம் கடல் நீரேரியின் ஒருபகுதியான தொண்டைமனாறு ஆற்றுவாயில் தேங்கியுள்ள மண்திட்டை அகற்றும் பணி இன்று தொடங்கவுள்ளவது. இதற்குரிய ஆரம்பகட்ட நிதியை வடமாகாணசபை வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் திரு.ஐங்கரநேசன் ஒழுங்கு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
கடந்த 15 வருடத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிட்ட மண் திட்டினால் கடல் நீரேரிக்கும் திறந்த கடலான வங்காள விரிகுடாவிற்கும் இடையிலான நீர்ப்பரிமாற்றம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடல் நீரேரியின் உவர்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன் கடல் வாழ் உயிரினங்களிலும் தாக்கத்தை உண்டுபண்ணுவதாக நம்பப்படுகின்றது.
தொண்டைமனாறு கடல் நீரேரியில் கடந்த சில தினங்களில் லட்சக்கணக்கில் கடல் வாழ் உயிரினங்கள் இறந்து வருவமை இங்கு கவனத்தில் கவனத்தில் கொள்ளத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.