40 வயதிற்கு மேற்பட்டோர் உதைபந்து, ரேவடி வி.க 2:0 என்ற கோல் கணக்கில் இளங்கதிரை வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2014 (சனிக்கிழமை)
வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களிற்க்கிடையிலான 40 வயதிற்கு மேற்பட்டோர்களிற்கான உதைபந்துப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று மாலை 4 மணிக்கு வல்வை ரெயின்போ கழகமைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் இளங்கதிர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ரேவடி விளையாட்டுக்கழகம் மோதியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் 1 கோலையும் ஆட்டத்தின் பிற்பாதியில் ௧ கோலையும் பெற்று வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகம் போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
ரேவடி விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் முன்னணி வீரர் டைசன் 2 கோல்களையும் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.