மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா சபைத் தெரிவுக் கூட்டம் மிகவும் விறுவிறுப்பான சூழலில் காலை 10.00 மணியளவில் முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் பருத்தித்துறை பிரதேச தலைவர், மற்றும் கிராம சேவையாளர்கள், மற்றும் அரச அதிகாரிகள் முன்னிலையில்
இன்று நடைபெற்றுள்ளது.
தர்மகர்த்தாசபைத் தலைவர் - இருவர் போட்டி
தர்மகர்த்தா சபைத் தலைவர் தெரிவுக்கு திரு.அழகேஸ்வரராசா (வெள்ளை அண்ணா) மற்றும் திரு.சேதுலிங்கம் ஆகிய இருவர் போட்டியிட்டதைத் தொடர்ந்து, வாக்கெடுப்பு நடாத்தப்பட்டிருந்தது. இதில் திரு.சேதுலிங்கம் 464 வாக்குகளையும் திரு.அழகேஸ்வரராசா 441 பெற்றதைத் தொடர்ந்து திரு.சேதுலிங்கம் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் தெய்வேந்திரம்
திரு.சேதுலிங்கம் தலைவரானதைத் தொடர்ந்து, கூட்டத்திற்கு சமுகமளித்திருந்த ஒரு தொகுதி மக்கள் வெளியேறியதைத் தொடர்ந்து சபையின் 15 அங்கத்துவர்களும் ஆதிகோவில் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள் தரப்பில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
செயலாராக திரு,ஜெயராஜ் அவர்களும், பொருளாளராக வல்வை நகரசபை உறுப்பினர்களில் ஒருவரான திரு.தெய்வேந்திரம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய கூட்டத்தில் 1000 ற்கு அதிகமானோர் கலந்து கொண்டுள்ளமை இதுவரையில் வல்வையில் இடம் பெறாத ஒன்று என்பது குறிப்பித்தக்கது. மேலும் முதன் முறையாக பெட்டியில் வாக்கெடுப்பும் நடாத்தப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த வாக்கெடுப்பிற்க்காக கிராம சேவையாளர்களால் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கூட்டம் பிற்பகல் 1 மணிவரை நீடித்திருந்தது.
முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.