வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள கடல் பகுதியில் உருவாக்கப்பட்டுவரும் கடல் தடாகத்திற்கான வேலைகளில் தற்பொழுது உழவு இயந்திரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டுவரும் குறித்த கடல் தடாகம் சுமார் 10,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த சித்திரை புதுவருட தினத்தன்று உத்தியோகபூர்வமாக ரேவடிப் பகுதியில் திறந்து வைக்கப்பெற்ற புனரமைக்கப்பெற்ற கடற்கரை மைதானம், புதிய சிறுவர் பூங்கா என்பன பொதுமக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.