வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை பிரசவ விடுதி புனரமைப்பிற்கு நலன்விரும்பி ஒருவர் உதவ முன்வந்துள்ளார்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2014 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை பிரசவ விடுதியின் புனரமைப்பிற்கு புலம்பெயர் நலன்விரும்பி ஒருவர் உதவி செய்ய முன்வந்துள்ளார். அண்மையில் பிரதேச வைத்தியசாலை உள்ள சாரங்கம்மா பிரசவ விடுதியை, பிரசவ விடுதியாகப் புணரமைக்க நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தனர்.
இதற்கமைய புலம்பெயர் நாடு ஒன்றில் உள்ள நலன் விரும்பி ஒருவர், வைத்தியசாலையின் சாரங்கம்மா பிரசவ விடுதியின் புனரமைப்பிற்குரிய பிரசவ அறையையும் அதனுடன் கூடிய மலசல கூடத்தினையும் அமைத்துத்தர முன்வதுள்ளதாக நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் Dr.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
குறித்த பிரசவ அறைக்குரிய வேலைகள் விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.